TV9 WITT Summit 2026: இந்தியாவின் மீதான நேர்மையான பார்வைக்கு பிரதமர் மோடி தான் காரணம் – ராமு ராவ் ஜுபள்ளி பெருமிதம்..

நாம் வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் இருப்பதாகவும், உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நெருக்கடிகள் உலகளவில் பொருளாதார அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளன என்றும், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் கூறினார். இருப்பினும், இந்தியா தனது தனித்துவமான செயல்திறன் மற்றும் உறுதியால் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

TV9 WITT Summit 2026: இந்தியாவின் மீதான நேர்மையான பார்வைக்கு பிரதமர் மோடி தான் காரணம் - ராமு ராவ் ஜுபள்ளி பெருமிதம்..

ராமு ராவ் ஜூபள்ளி

Published: 

24 Mar 2026 15:22 PM

 IST

மார்ச் 24, 2026: டிவி9 நெட்வொர்க் நடத்தும் “வாட் இந்தியா திங்ஸ் டுடே சம்மிட் 2026” டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. சம்மிட்டின் முதல் நாளில் மை ஹோம் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமு ராவ் ஜுபள்ளி பேசியபோது, உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும், உலகளவில் பொருளாதார குழப்ப நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும், இந்தியாவுக்கு ஜனநாயகம், மக்கள் தொகை, பல்வகைமையுடைய சக்தி இருப்பதாகவும் கூறினார். உலகம் இந்திய இளைஞர்களை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராமு ராவ் ஜுபள்ளி பேசிய முக்கிய அம்சங்கள்:

நாம் வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் இருப்பதாகவும், உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நெருக்கடிகள் உலகளவில் பொருளாதார அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளன என்றும், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் கூறினார். இருப்பினும், இந்தியா தனது தனித்துவமான செயல்திறன் மற்றும் உறுதியால் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மீதான நேர்மையான பார்வைக்கு பிரதமர் தான் காரணம்:

“பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் கூறுவது போல, இந்தியாவுக்கு ஜனநாயகம், மக்கள் தொகை, பல்வகைமை ஆகிய சக்திகள் உள்ளதால் உலகம் இந்திய இளைஞர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. பல துறைகளிலும், ஆட்சிமுறைகளிலும் இந்தியாவைப் பற்றிய நேர்மறையான பார்வைக்கு காரணம் உண்மையில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையே ஆகும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகத் தயாராக உள்ளது. தொடர்ந்து 7 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கொண்ட ஒரே பெரிய பொருளாதாரமாக இது திகழ்கிறது. வலுவான பொருளாதார அடித்தளம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளின் மூலம் இந்தியா உலக தொழிலாளர் சந்தையை மறுவடிவமைத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

உலக தேவையை இந்திய இளைஞர்கள் பூர்த்தி செய்கிறார்கள்:

“தற்போது உலகம் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. ஜெர்மனியின் பாரம்பரிய தொழில்கள் முதல் கனடாவின் தொழில்நுட்ப மையங்கள் வரை, மேலும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பகுதிகளின் பல்வகை பொருளாதாரங்களிலும் தரமான திறமைகளுக்கான தேவை உள்ளது. இந்த தேவையை பெரிய அளவில், அதுவும் பணிவுடன் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட ஒரே நாடு இந்தியா தான். இந்திய மக்களின் தனித்துவம் ஏழு முக்கிய தூண்களின் மீது அமைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த தூண்கள் அனைத்தும் சமீப ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் உருவாகியவை.

உலகின் திறமையாளர்களின் களஞ்சியம் இந்தியா:

உலகின் பிற நாடுகள் முதிர்ந்த மக்கள் தொகையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது, இந்தியா இளம் நாடாக திகழ்கிறது. நாம் உலகின் திறமையாளர்களின் களஞ்சியம். நமது டிஜிட்டல் பொது கட்டமைப்பு உலகுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இது தரவு உருவாக்கத்தை முன்னெடுக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொது சொத்துக்கள் (Digital Public Goods) சூழல் தற்போது உலக அளவில் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது. இந்திய மக்களின் தனித்துவம் இந்த ஏழு முக்கிய தூண்களின் மீது அமைந்துள்ளது; அவை அனைத்தும் பிரதமர் மோடியின் தலைமையில் உருவாக்கப்பட்ட கொள்கை அமைப்புகளின் அடிப்படையில் உள்ளன” என்று ராமு ராவ் ஜுபள்ளி தெரிவித்தார்.

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்