வேற லெவல்.. எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி.. எந்த ரூட்ல தெரியுமா?

India first ATM On Train: விரைவு ரயிலில் ஏடிஎம் சேவையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பையின் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ஏடிஎம் ஞ்சவதி எக்ஸ்பிரஸில் ரயிலின் ஏசி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் ரயிலில் பயணிக்கும்போதே பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

வேற லெவல்.. எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி.. எந்த ரூட்ல தெரியுமா?

ரயிலில் ஏடிஎம் சேவை

Updated On: 

17 Apr 2025 08:54 AM

 IST

மும்பை, ஏப்ரல் 17: இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம் சேவையை இந்திய ரயில்வே (ATM On Express Train)அறிமுகப்படுத்தி உள்ளது. நாசிக் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ரயில் ஒன்றில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள், ரயிலில் பயணித்துக் கொண்டே தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும்.  இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.  இந்த புதிய நடைமுறைக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இந்தியாவில் ரயில் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி

ரயில் சேவையை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொலைதூரம் பயணிக்கும் நடுத்தர மக்களின் விருப்பமாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணம், படுக்கை வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை வழங்க ரயில்களை மத்திய நவீனப்படுத்தி வருகிறது. இதற்காக பல விதமான ரயில்கள் அறிமுகப்படுத்துகிறது. வந்தே பாரத் என அதீ வேக ரயில்களையும் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறறது. இந்த நிலையில், ரயில்களில் ஏடிஎம் வசதியை கொண்டு வந்துள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி நடந்துள்ளது. மும்பை-மன்மத் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது. பஞ்சவதி எக்ஸ்பிரஸ் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) மற்றும் நாசிக்கில் உள்ள மன்மத் சந்திப்பு இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

எந்த ரூட்ல தெரியுமா?


இந்த ரயிலில் தற்போது ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது. ரயிலின் ஏசி பெட்டியில் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது பணம் தேவைப்படும் பயணிகளுக்கு ரயிலில் பயணிக்கும் போதே எடுத்துக் கொள்ள முடியும்.  பணம் மட்டுமில்லாமல், வங்கி கணக்கு அறிக்கைகளையும் இந்த ஏடிஎம் மூலம் பெற முடியும். இது பயணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. விரையில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஏடிஎம்மில் ஒரு ஷட்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பயணிகள் மத்தியில் இந்த சேவை வரவேற்பு பெற்றால், மேலும் பல ரயில்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படலாம் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow Us
Related Stories
ஐடி டூ முதலீட்டு வங்கியாளர்.. ஐஐஎம்பி-யில் தங்கப் பதக்கம் வென்று த்வீத் மேத்தா சாதனை
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!
வடமேற்கு இந்தியாவில் வானிலை மாற்றம்.. மேற்கு காற்றழுத்த அலை தாக்கத்தால் கனமழை எச்சரிக்கை
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்