Venkat Prabhu : கோட் படத்தில் ‘சிஎஸ்கே’ காட்சியை வைக்கக் காரணம் அதுதான்.. இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!
Venkat Prabhu About GOAT Movie Climax : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரை இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் இறுதியாக தி கோட் படம் வெளியானது. இந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காட்சியை வைத்த காரணம் பற்றிப் பேசியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu ) திரைப்படங்கள் என்றாலே நிச்சயமாக ஆக்ஷ்ன், காமெடி மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் இருக்கும். அந்த வகையில் அவரின் முன்னணி இயக்கத்தில் இறுதியாக வெளியாகி சுமார் ரூ. 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனையைப் படைத்த திரைப்படம் தி கோட் (The GOAT). இந்த படத்தில் நடிகர் விஜய் (Vijay) ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் அருமையாக அமைந்திருந்தது. இந்த படத்தில் முன்னணி நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி (Sneha, Meenakshi Chowdhury) என முன்னணி நாயகிகள் இருவரும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடிகை திரிஷா கிருஷ்ணன் நடனமாடியிருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் இப்படமானது கடந்த, 2024, செப்டம்பர் 5ம் தேதியில் இப்படம் வெளியாகியிருந்தது.
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், காந்தி மற்றும் ஜீவன் இருவரும் சண்டைபோடும் காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK team) கிரிக்கெட் மேட்ச் இடம் பெற்றதை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். அதில் அவர், “எனக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பிடிக்கும் , அதன் காரணமாகத்தான் கோட் படத்தில் அந்த காட்சியை வைத்தேன்” என்று பேசியிருந்தார். மேலும் அவர் பேசியதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




இயக்குநர் வெங்கட் பிரபு கோட் பட க்ளைமேக்ஸ் பற்றிப் பேசியது :
அந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு, “நான் பெரிய சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபேன். அதன் காரணமாகத்தான் விஜய்யின் கோட் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில், நான் சிஎஸ்கே மேட்சை வைத்தேன். அது பல பேருக்கு பிடித்திருக்காது என்று தெரியும், நிறைய ஆர்சிபி ரசிகர்கள் அதை விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். நான் ஒரு வேலை ஐபிஎல் ஏலத்தில் இருந்தேன் என்றால் தோனியை மீண்டும் இன்னும் ஒரு 3 வருடத்திற்கு சிஎஸ்கே அணிக்கு ஏலத்தில் எடுப்பேன். மேலும் ‘கோட் விஸ் ஓஜி’ அப்டேட்டை பலரும் கேட்கின்றனர் அதை நான் 2026ம் ஆண்டுக்குப் பின் கூறுகிறேன்” என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
வெங்கட் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
வெங்கட் பிரபுவின் புதிய படம் யாருடன் :
விஜய்யின் கோட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு, பிரபல நடிகர் ஒருவருக்குக் கதை கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன்தான். சிவகார்த்திகேயன் இறுதியாக விஜய்யின் கோட் இடத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அது மக்கள் மத்தில் மிகவும் பிரபலமாகிப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.