Cinema Rewind : எனக்கு பிடித்த வேலை இதுதான்.. சினிமாவுக்கு முந்தைய பணி குறித்து பேசிய நடிகை அனுஷ்கா
Anushka Shetty : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் சமீபகாலமாகத் தமிழில் படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்தான். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், நடிகையாக ஆகவில்லை என்றால் என்ன செய்திருப்பேன் என்று அவர் கூறியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய பேமஸ் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்த மொழி படங்களைத் தொடர்ந்து மலையாளத்திலும் இவரின் நடிப்பில் படங்கள் உருவாகத் தொடங்கியுள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் பாகமதி (Bhaagamathie). இந்த படைத்த தொடர்ந்து இவரின் நடிப்பில் தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை. அனுஷ்கா ஷெட்டி கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் (Super) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவுடன் (Nagarjuna) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகின.
மேலும் இவருக்குத் தமிழில் முதல் படமாக அமைந்தது ரெண்டு. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சிறப்புக் கதாபாத்திரமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அதை தொடர்ந்து முன்னணி நாயகியாகத் தமிழில் இவருக்குக் கிடைத்த படம் வேட்டைக்காரன். தளபதி விஜய்யின் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் விஜய், சூர்யா, அஜித், பிரபாஸ் என பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நான் நடிகை ஆகவில்லை என்றால் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருப்பேன் என்று கூறியிருந்தார் அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
நடிகை அனுஷ்கா ஷெட்டி பேசிய விஷயம் :
முன்னதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், தொகுப்பாளர் அவரிடம் நீங்கள் நடிகையாக ஆகவில்லை என்றாலே என்ன செய்திருப்பிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி , நான் நடிகை ஆகவில்லை என்றால் நிச்சயமாகப் பள்ளியில் டீச்சராக பணியாற்றியிருப்பேன். அதுவும் 3 வகுப்பு அல்லது 4 வகுப்பு குழந்தைகளுக்கு ஆசிரியராக பணியாற்றியிருப்பேன். நான் சினிமாவில் நடிப்பதற்கு முன் எனது ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகத்தான் பணியாற்றினேன். அதனால் எனக்குக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மிகவும் பிடிக்கும்.
மேலும் எனக்கு பெரிய மாணவர்களுக்குப் பாடம் எடுக்கப் பிடிக்காது, 3 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கும் மட்டும்தான் பாடம் எடுக்க எனக்குப் பிடிக்கும். 5 வகுப்பு மேல் படிக்கும் மாணவர்கள் அதிகம் சேட்டை செய்வார்கள் அதனால்தான் எனக்கு குழந்தைகளுக்கு பாடம் எடுக்க பிடிக்கும் என்று அவர் அதில் கூறியிருந்தார். இந்த விஷமானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை அனுஷ்கா ஷெட்டி பல ஆண்டுகளாக தமிழில் படங்களில் நடிக்காவிட்டாலும், இவரின் பிரபலம் மட்டும் மக்கள் மத்தியில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.