‘பிரதமர் மோடியை தாத்தா என அன்பு கொண்டாடினர்’.. இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!
US Second Lady Usha Vance : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இந்தியா உத்திசார் கூட்டாண்மை மன்றத்தில் பேசியுள்ளார். இந்தியா-அமெரிக்க உறவுகள் தனக்கு மிகவும் தனிப்பட்டவை என்று அவர் கூறினார். தனது குடும்ப உறவுகள் மற்றும் இந்தியா பயண அனுபவங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவியும் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியுமான உஷா வான்ஸ், இந்தியா-அமெரிக்க உறவுகள் தனக்கு மிகவும் தனிப்பட்டவை என்று கூறியுள்ளார். வாஷிங்டன் டிசியில் நடந்த அமெரிக்க-இந்தியா உத்திசார் கூட்டாண்மை மன்றத்தில் (USISPF) பேசுகையில் உஷா வான்ஸ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இது மிகவும் தனிப்பட்ட உறவு. ஏனெனில் எனது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள், மேலும் எனது குடும்ப உறுப்பினர்கள் பலர் இங்கே அமெரிக்காவிலும் உள்ளனர் . நான் இந்தியாவுக்கு வந்து என் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தே வளர்ந்தேன்.இந்த உறவை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன் என்றார்
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள்
இந்த நிகழ்ச்சியின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த வான்ஸ், ”என் கணவர் இங்கே இருந்திருந்தால், அவரும் இதையேதான் சொல்வார் என்று நினைக்கிறேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் பல முறை ஏற்ற இறக்கமாக இருந்துள்ளன, ஆனால் தற்போது, அடுத்த நான்கு ஆண்டுகளிலும் எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்பட சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன் என்றார்.




உஷா வான்ஸ் கலந்துரையாடல்
#WATCH | In a conversation at the US-India Strategic Partnership Forum in Washington, DC, US Second Lady Usha Vance recalls her visit to India and her children’s experience meeting PM Modi.
She says, “When we were at the Prime Minister’s residence, our son was just so taken by… pic.twitter.com/OSEnfffrok
— ANI (@ANI) June 2, 2025
பிரதமர் மோடியுடனான சந்திப்பு
அமெரிக்க இரண்டாம் பெண்மணி உஷா வான்ஸ், தனது இந்திய வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து கூறுகையில், பிரதமரை சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது . அந்த நேரத்தில் எனது குழந்தைகள் தாடி மற்றும் வெள்ளை முடியுடன் ஒரு இந்தியரைப் பார்த்ததும், உடனடியாக அவரை தாத்தா என அன்பு கொண்டாடினர். எனது குழந்தைகள் பிரதமர் மோடியால் மிகவும் ஈர்க்கப்பட்டனர், அவரை மிகவும் நேசிக்கிறார்கள் என்றார்.
எங்களுக்கு ஒரு வாழ்நாள் பயணம்
“இது உண்மையிலேயே எங்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பயணம்” என்று உஷா வான்ஸ் கூறினார். என் குழந்தைகள் இந்தியாவுக்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர்கள் இந்த நாட்டைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டு வளர்ந்தார்கள். கதைகள், உணவு, தாத்தா பாட்டி மற்றும் நண்பர்களுடனான உறவுகள் உட்பட. ஆனால் அவர்கள் உண்மையில் அதைப் பார்த்ததில்லை, அதனால் அது அவர்களுக்கு ஒருவிதத்தில் மனதைக் கவரும் விதமாக இருந்தது. பின்னர் ஜேடிக்கும் எனக்கும் இது இதைவிட சிறப்பு வாய்ந்த பயணம் வேறில்லை . எங்கள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, வட இந்தியாவின் சில சிறந்த இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் எங்கள் அடுத்த சுற்றுப்பயணத்திற்காகக் காத்திருக்கிறோம். இந்த முறை என் குடும்பம் பிறந்த பகுதிகளுக்குச் செல்ல முயற்சிப்போம் என்றார்
USISPF உச்சி மாநாடு விவரம்
USISPF 2025 உச்சிமாநாட்டில், உலகளாவிய தலைமைத்துவ விருதுகள் IBM தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் ஹிட்டாச்சி நிர்வாகத் தலைவர் தோஷியாகி ஹிகாஷிஹாரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குவாட் குழுமத்தைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் USISPF உச்சிமாநாட்டில் கௌரவிக்கப்படுவது இதுவே முதல் முறை.