அதிமுகவின் எதிர்தாக்குதல் பலமாக இருக்கும் – கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்டித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேலிசித்திரம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, ''கேலிச்சித்திரம் தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா மீது புகார் கொடுத்திருக்கிறோம். நாங்களும் இது போல கார்டூன்களை போட ஆரம்பித்தால் திமுக தலைவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. திமுக தலைவர்கள், திமுக ஐடி விங் நிம்மதியாக இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது கருத்தியல் ரீதியாக தாக்குதல் நடத்தினால், அதிமுகவின் எதிர்தாக்குதல் பலமானதாக இருக்கும். திமுக ஐடி விங் இத்துடன் மூர்க்கத்தனமான பணியை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்டித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேலிசித்திரம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, ”கேலிச்சித்திரம் தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா மீது புகார் கொடுத்திருக்கிறோம். நாங்களும் இது போல கார்டூன்களை போட ஆரம்பித்தால் திமுக தலைவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது கருத்தியல் ரீதியாக தாக்குதல் நடத்தினால், அதிமுகவின் எதிர்தாக்குதல் பலமானதாக இருக்கும். திமுக ஐடி விங் இத்துடன் மூர்க்கத்தனமான பணியை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
Latest Videos