Viral Video : பெண் பயணியை கன்னத்தில் அறைந்த Rapido ஓட்டுநர்.. வேகமாக சென்றதை கேள்வி கேட்டதால் ஆத்திரம்!
Rapido Driver Slaps Passenger | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ரேப்பிடோ ஓட்டுநர் ஒருவர் இளம் பெண்ணை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் அவசரமான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அனைத்திற்கும் நேர கட்டுப்பாடு உள்ளதால் உரிய நேரத்திற்கு உரிய இடத்திற்கு செல்ல வேண்டு என்ற கட்டாயம் உள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என வேலை மற்றும் படிப்புக்காக அனைவரும் அன்றாடம் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படும். இந்த நிலையில், சிலர் நேரமின்மை காரணமாக சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும் என விதிகளை மீறி நடந்துக்கொள்வர். அவ்வாறு விதியை மீறி வாகனம் ஓட்டிய ரேப்பிடோ டிரைவரை இளம் பெண் ஒருவர் கேள்வி கேட்டதால், அந்த ஓட்டுநர் இளம் பெண்ணை கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
வேகமாக வாகனம் ஓட்டியதால் கேள்வி கேட்ட பயணி – கன்னத்தில் அறைந்த ஓட்டுநர்
பெங்களூருவில் ரேப்பிடோ ஓட்டுநர் ஒருவர் தனது பயணியை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலை விதிகளை பின்பற்றாமல் வேகமாக சென்றதை கேள்வி கேட்டதால், ரேப்பிடோ ஓட்டுநர் தன்னை அடித்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பெண் பயணியை கன்னத்தில் அறைந்தவர் சுஹாஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




இணையத்தில் வைரலாகும் வீடியோ
BENGALURU: Rapido bike rider slaps customer as she allegedly questions him over rash driving and jumping signal. Incident occurred on June 14th in Jayanagar area of Bengaluru.
Jayanagar police are looking into the case.
INPUT: @Harishup pic.twitter.com/j8IbpvItT0— Rahul Shivshankar (@RShivshankar) June 16, 2025
முற்றிலும் வேறு கதையை சொன்ன ரேப்பிடோ ஓட்டுநர்
இது குறித்து கூறியுள்ள ரேப்பிடோ ஓட்டுநர், அந்த பெண் தான் தன்னை முதலில் அடித்ததாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே அந்த பெண் தன்னை திட்டியதாகவும், பயண நேரத்தை குறைப்பதற்காக குறுக்கு வழியில் பயணம் செய்த நிலையில் தான் எங்கே படித்தேன் தனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து அந்தப் பெண் கேள்வி கேட்டதாக அவர் கூறியுள்ளார். அவர்கள் பயணம் செய்த வழியில் ஒரு கார் குறுக்கிட்ட நிலையில், அந்தப் பெண்ணின் அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்னால் அவரை இறக்கி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண் காரணம் கேட்டதாகவும், முழு கட்டணத்தை தர மறுத்ததாகவும் ஓட்டுனர் கூட்டம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி அந்த பெண் தான் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸை கொண்டு தன்னை அடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பெண்களை அடிக்க கூடாது என்பது எனக்கு தெரியும், ஆனால் அந்த பெண் இரண்டு முறை என்னை அடித்து திட்டியதால் தான், நான் அவரை ஒரு முறை அடித்தேன் என்று அந்த நபர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.