Pavel Durov : எனது 17 பில்லியன் சொத்துக்களை எனது 106 பிள்ளைகளுக்கு வழங்குகிறேன்.. டெலிகிராம் CEO பாவெல் துரோவ்!
Pavel Durov Interview | டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள பாவெல் துரோவ் உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு மொத்தம் 106 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது 17 பில்லியன் சொத்துக்களை அவர் தனது 106 பிள்ளைகளுக்கும் பிரித்து வழங்குவதாக கூறியுள்ளார். சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓவும் (Telegram CEO), உலக பணக்காரர்களில் ஒருவருமான பாவெல் துரோவ் (Pavel Durov) தனது 17 பில்லியன் சொத்துக்களை எனது 106 பிள்ளைகளுக்கு பிரித்து வழங்குவதாக கூறியுள்ளார். சமீபத்தில் Le Point என்ற பிரஞ்சு இதழுக்கு நேர்காணல் அளித்த அவர் இது குறித்து பேசியுள்ளார். வேலை நிமித்தமாக தனக்கு இருக்கும் ஏராளமான விரோதிகள் காரணமாக, தனது பிள்ளைகளுக்காக இப்போதே உயில் எழுதி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாவெல் துரோவ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
106 பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ள பாவெல் துரோவ்
டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் 106 பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ளார். 40 வயதாகும் பாவெல் துரோவ் கடந்த 15 ஆண்டுகளாக விந்தணு தானம் செய்து வருகிறார். அவருக்கு இருக்கும் இந்த 106 குழந்தைகளில் 100 குழந்தைகள் விந்தணு தானம் மூலம் பிறந்தவை. மீதமுள்ள ஆறு குழந்தைகள் மூன்று வெவ்வேறு மனைவிகளுக்கு பிறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக 12 நாடுகளுக்கு விந்தணு தானம் செய்ததன் அடிப்படையில் 100 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய பாவெல்
The biggest interview I’ve ever done — and the first I’ve given to the French press. People deserve to be informed! I’m told an English version is also coming, so stay tuned. https://t.co/Zbt12GL4ZX
— Pavel Durov (@durov) June 18, 2025
எனது பிள்ளைகளுக்கு பிரித்து பார்க்க விரும்பவில்லை – பாவெல் துரோவ்
தனது குழந்தைகள் குறித்து பேசிய பாவெல் துரோவ், நான் எனது குழந்தைகளை பிரித்து பார்க்க விரும்பவில்லை. நான் எனது மனைவிகளுடன் இணைந்து பெற்றுக்கொண்ட குழந்தைகள் மற்றும் எனது விந்தணு மூலம் பிறந்த குழந்தைகள் என பிரித்து பார்க்கவில்லை. அவர்கள் அனைவருமே எனது குழந்தைகள். அவர்கள் அனைவருக்குமே அனைத்து உரிமைகளும் உண்டு என்று கூறியுள்ளார்.
17 பில்லியன் சொத்துக்களை எனது 106 பிள்ளைகளுக்கு வழங்குகிறேன் – பாவெல்
தனது 17 பில்லியன் டாலர் சொத்துகளை தனது 106 பிள்ளைகளுக்கும் பிரித்து வழங்குவதாக பாவெல் தெரிவித்துள்ளார். இருப்பினும் பிள்ளைகள் அவர்களது 30வது வயதை தாண்டும் போதுதான் அவர்களால் அந்த சொத்துக்களை பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாவெல் துரோவின் தற்போதைய சொத்து மதிப்பு 17 பில்லியனாக உள்ளது. இந்த நிலையில், 106 பிள்ளைகளுக்கு அதை அவர் பிரித்து வழங்கும் பட்சத்தில் ஒரு பிள்ளைக்கு 131 மில்லியன் முதல் 161 மில்லியன் வரை கிரைக்க வாய்ப்புள்ளது.