பூந்தமல்லி டூ பரந்தூர்.. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி.. முழு விவரம்
poonamallee - parandur Metro Route : சென்னை பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான 51.94 கி.மீ நீள மெட்ரோ வழித்தடத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ உயர் பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை, ஜூன் 03 : சென்னை பரந்தூர் முதல் பூந்தமல்லி வரை (poonamallee parandur metro) மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு (Tamil nadu goverment) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை ரூ-8,779 மதிப்பில் உயர் பாலம் அமைக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக இருப்பது மெட்ரோ ரயில்கள் (chennai metro rail). இந்த மெட்ரோ ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையம், சைதாப்பேட்டை, நந்தம் வழியாக ஒரு வழித்தடமும், சென்டரில் இருந்து கோயம்பேடு, ஆலந்துரை அடையும் வழியில் மற்றொரு வழித்தடமும் உள்ளது.
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ சேவை
பயணிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவை மிகுந்த வரவேற்பை பெற்று வருவதை அடுத்து, பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படியே, தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த 2027ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பூந்தமல்லி – பரந்தூர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக சாத்தியக்கூறு அறிக்கையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பூந்தமல்லி – பரந்தூர் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக அரசு ஒப்பதல்
#TamilNadu Govt gives In-principle approval for Metro rail Phase II extension between #Poonamallee – #Parandur corridor
– Phase 1: Elevated corridor from Poonamallee to Sunguvarchatram (27.9 km) at a cost of ₹8,779 Cr#ChennaiMetro | #CMRL | #ParandurAirport | #Chennai pic.twitter.com/1CWkjaBhov
— TN Industrial & Investment Updates (@TnInvestment) June 2, 2025
மொத்தம் 59.4 கி.மீ தூரத்தில் பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கவும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ரூ.8,779 மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. மேலும், பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ வழித்தடம் அமைக்க ரூ.15,906 கோடி மதிப்பீடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, நாசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், சமத்துவபுரம், செட்டிப்பேடு, தண்டலம், சிப்காட் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெருநூல்புதூர், சத்திரம், பட்டுநூல்புதுார் ஆகிய 14 நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.