நீலகிரி டூ கோவை.. அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 2025 ஜூன் 4,5ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி டூ கோவை.. அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை..  லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

தமிழகத்தில் மழை

Updated On: 

04 Jul 2025 13:51 PM

 IST

சென்னை, ஜூலை 04 : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு  கனமழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather Update) என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் (Chennai Rains) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.  குறிப்பாக வெயில் அடிக்கும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.   தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும்,  மழை பெய்யும் ஜூன் மாதத்தில் வெயில் அடித்துது.  2025 ஜூன் மாதத்தில்  சில நாட்கள் வெயில் அடித்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அதைத்  தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கூட, மாலை  மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை, நீலகிரிக்கு கனமழை அலர்ட்

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் எப்படி?

2025 ஜூன் 4,5ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை தூத்துக்குடியில் 38.5 டிகிரி செல்சிஸ், குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த சில தினங்களுக்கு தமிழக்ததில் பரவலாக மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
சென்னை: மூடப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா… காரணம் என்ன?
தமிழக வானிலை அப்டேட்: கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
போதிய எரிவாயு கையிருப்பு உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்..
‘ரஜினிகாந்த்திற்கு திமுக மிரட்டல் விடுத்தது… விஜய்க்கு மனவலிமை அதிகம் – ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் சர்ச்சை
3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு கனவிலும் நினைத்திடாத தண்டனை.. நெல்லை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
K. Selvaperunthagai Tamil Nadu Election: 4 கட்சிகள் மாற்றம்.. காங்கிரஸில் தலைமை பதவி.. செல்வப்பெருந்தகையின் 3-ஆவது முறை எம்எல்ஏ கனவு பலிக்குமா?
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..