Tamilnadu Weather Alert: நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்; தெற்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Red Warning for Nilgiris: நீலகிரி மாவட்டத்தில் 2025 ஜூன் 14, 15 தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamilnadu Weather Alert: நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்; தெற்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

Published: 

13 Jun 2025 15:06 PM

தமிழ்நாடு ஜூன் 13: நீலகிரி மாவட்டத்தில் (Ooty Red Alert) 2025 ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் (Heavy Rain Alert) விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவுப் பகுதிகள் 283 இடங்களில் கண்காணிக்கப்படுகின்றன. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் (Theni Heavy Rain) கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மீனவர்கள் 2025 ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரியில் ரெட் அலர்ட் – மண் சரிவு அபாயம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக செயல்பட்டு வருவதால், நாளை (2025 ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் (2025 ஜூன் 15) அதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் 283 அபாயப் பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 43 மண்டல குழுக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 பேர் உதகைக்கு வந்துள்ளனர். மண் சரிவு அல்லது மரம் விழும் சம்பவங்களை 1077 எண்ணில் தெரிவிக்க பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜூன் 14-ம் தேதி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வடக்கு கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

7 நாட்கள் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

ஆரஞ்சு எச்சரிக்கை – நான்கு மாவட்டங்கள்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் மழை நிலை – ஜூன் 14, 2025

  • தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை ஏற்படலாம்.
  • கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகியவற்றின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • தேனி, திண்டுக்கல் ஆகியவற்றில் கனமழை பெய்யலாம்.
  • சில இடங்களில் மணிக்கு 40-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மீனவர்களுக்கான கடல்சார் எச்சரிக்கை

2025 ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் அபாயம் உள்ளது. எனவே, மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஆரஞ்சு மற்றும் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள், அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மண் சரிவு, வெள்ளப்பெருக்கு, மரம் விழும் அபாயம் உள்ள பகுதிகளில் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.