Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu IAS Officer Transfers: தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. 9 மாவட்ட ஆட்சியர்கள் புதிதாக நியமனம்!

District Collector Transfers Tamil Nadu: தமிழ்நாடு அரசு 55 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்கல்வி, போக்குவரத்து, நிதித்துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 55 IPS அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

Tamil Nadu IAS Officer Transfers: தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. 9 மாவட்ட ஆட்சியர்கள் புதிதாக நியமனம்!
தமிழ்நாடு அரசு
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Jun 2025 15:52 PM

சென்னை, ஜூன் 23: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் (IAS Officers) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது மதுரை, திருச்சி, சிவகங்கை, திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர், செங்கல்பட்டு, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, உயர்கல்வி செயலாளராக சங்கரை நியமித்தும், போக்குவரத்துத் துறை செயலாளராக லில்லியும், நிதித்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷூம் நியமித்து தமிழ்நாடு அரசு (Tamil Nadu Govt) உத்தரவிட்டுள்ளது. நகராட்ச்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலறாக உமா நியமிக்கப்பட்டுள்ளனர்.

55 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:

திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாநகராட்சி ஆணையாளராக இருந்த வெ.சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் ஆட்சியராக அருண்ராஜும், செங்கல்பட்டு ஆட்சியராக சினேகா, மதுரை ஆட்சியராக கே.ஜே. பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுகபுத்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்காமூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக கோ. பிரகாஷ் நியமனம்:

சென்னை சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக கோ.பிரகாஷ், வணிக வரி ஆணையராக நாகராஜன், திருப்பூர் ஆணையராக எம்.பி. அமித், திருநெல்வேலி ஆணையராக மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக வீ.ப.ஜெயசீலன், திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், ஓசூர் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவடி மாநகாராட்சி ஆணையர் ரா.சரண்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ரூகேற்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளனர். வணிகவரி பதிவுத்துறை அரசு செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ், மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளராக சி.சமயமூர்த்தி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.