தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல்.. பாதியில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!

Hosur Flyover Collapse: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தின் 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' பகுதியில் ரோப் அறுந்து, பாலம் சேதமடைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல்.. பாதியில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!

மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்

Published: 

22 Jun 2025 10:43 AM

 IST

கிருஷ்ணகிரி ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்டம் (Krishnagiri District) ஓசூர் பஸ் நிலையம் (Hosur Bus Stand) அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (Bangalore National Highway) மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு 3 கி.மீ. நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தின் ‘எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்’ பகுதியில் ரோப் அறுந்து, பாலம் பில்லரிலிருந்து முக்கால் அடி வெளியே சறுக்கியது. பாதுகாப்பு காரணமாக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டதால் நகரம் முழுவதும் போக்குவரத்து மிகுந்தது. கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் பயன்படுத்தப்பட்ட இந்த மேம்பாலம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைப்புக்கு நாட்கள் எடுக்கும் என தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால், வாகன போக்குவரத்து 2025 ஜூன் 21 ஆம் தேதி மதியம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. தொலைவில் வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது. தினசரி 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், மதியம் 12:30 மணிக்கு மேம்பாலத்தின் “எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்” பகுதியில் ரோப் அறுந்து, ஸ்பிரிங் முறிந்ததால் பாலம் பில்லரிலிருந்து வெளியே சறுக்கியது.

ஓசூர் நகரம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லுவதால் ஆபத்து ஏற்படும் நிலையில், அந்த வழியிலான போக்குவரத்து நிறுத்தி, வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பி விட காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதனால் ஓசூர் நகரம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பத்தலப்பள்ளி முதல் ஓசூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்

கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை என புகார்

ஏற்கனவே நகரத்தில் பல்வேறு சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து தடைப்பட்டு வருவது, தற்போது இந்த மேம்பால பழுது காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்தப்பட்டதால் இப்போது பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீரமைப்பு பணிகள் முடிந்த பின்பே போக்குவத்து மீண்டும் தொடங்கும்

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் பிரசன்னா தலைமையில் அதிகாரிகள் 2025 ஜூன் 21 ஆம் தேதி நேற்று மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்தனர். மைய இணைப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக வாகன ஓட்டத்தை தற்காலிகமாக தடுத்து, சர்வீஸ் சாலையிலே மாற்றிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத்திலிருந்து திட்ட அதிகாரி வரவிருக்க, ஜாக்கி வைத்து சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்றும், அது முடிந்த பிறகே வாகன ஓட்டம் மீண்டும் அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..