கொடைக்கானல், ஏப்ரல் 28, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு இன்று காலை பொதுமக்கள் மத்தியில் செல்பி எடுத்துக்கொண்டு, சைக்கிள் ஓட்டி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒரு மாத காலம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டம் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்ற முதல்வர் ஸ்டாலின்:
தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு தினமும் காலை பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வதும், அவர்களுடன் உரையாடுவதும், செல்பி எடுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க: மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..
இந்த நிலையில், இன்று நட்சத்திர ஏரி பகுதியில் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டார். தினசரி காலை இங்கு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அவரைக் காண அதிகாலையிலேயே கட்சி தொண்டர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரைக்கு திரண்டனர்.
கொடைக்கானல் ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்:
இதையடுத்து, முதலமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் ஏரியைச் சுற்றி சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும் படிக்க: 106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..