Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்.. தீவிர விசாரணை.. மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு!

Drug Case : போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை எனவும் இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை எனவும் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. இதனால், கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்.. தீவிர விசாரணை.. மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு!
நடிகர் கிருஷ்ணாImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jun 2025 20:46 PM

சென்னை, ஜூன் 25 : போதைப் பொருள் வழக்கில் (Drug Case) நடிகர் கிருஷ்ணாவிடம் (Actor Krishna) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து கிருஷ்ணாவை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாட்களாக போலீசார் கிருஷ்ணாவை தேடி வந்த நிலையில், 2025 ஜூன் 25ஆம் தேதியான இன்று அவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என கிருஷ்ணா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாக தெரிகிறது. இதனால், கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவரது இரத்தப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் முறையாக  கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது

2025 ஜூன் 17ஆம் தேதி நுங்கம்பாக்கம் பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் போதைப் பொருள் சப்ளை செய்ததாக அதிமுக பிரமுகர் பிரசாத் கைது செய்யப்பட்டார். அப்போது, இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கயானை நாட்டைச் சேர்ந்த ஜான் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை எனக் கூறினார்.

ஆனால், இந்த விஷயத்தில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்படுகிறாரா கிருஷ்ணா?

ஸ்ரீகாந்தை தவிர, நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது, அவரது போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவர் குறித்து விசாரித்ததில், அவர் கேரளாவில் இருப்பது தெரிந்தது.

இதனை அடுத்து, ஐந்து தனிப்படைகள் அமைத்து, கிருஷ்ணாவை போலீசார் தேடினர். இறுதியாக போலீசார் அவரை பிடித்து, சென்னையில் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்த் உடனான நட்பு, போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை செய்ய திட்டம்

மேலும், தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால், போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன் எனவும் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, மருத்து பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணா மீது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.