Astrology: ரிஷப ராசியில் சுக்கிரன்.. 12 ராசிகளில் நடக்கப்போகும் மாற்றம்!

2025 ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறது. இதனால் 12 ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மேஷ ராசிக்கு நிதிநிலை மேம்படும். ரிஷப ராசிக்கு மாலவ்ய மகா புருஷ யோகமும், மிதுன ராசிக்கு ஆடம்பர வாழ்க்கையும் அமையும். அதேபோல் கடகம் ராசிக்கு வருமானம் அதிகரிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: ரிஷப ராசியில் சுக்கிரன்.. 12 ராசிகளில் நடக்கப்போகும் மாற்றம்!

ஜோதிடப்பலன்

Published: 

25 Jun 2025 12:50 PM

ஜோதிடத்தில் 9 கிரகங்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தது. இதில் குருவுக்குப் பிறகு மிக முக்கியமான கிரகமாக சுக்கிரன் பார்க்கப்படுகிறது. ஜாதகத்திலோ அல்லது கிரகப் பெயர்ச்சியிலோ சுக்கிரன் சாதகமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நபருக்கு வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. தனி மனிதனின் வாழ்க்கையில் அனைத்து வகையான மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் சுக்கிரன் பார்வை வேண்டும் என கூறப்படுகிறது. அப்படியான கிரகமான சுக்கிரன், இந்த 2025, ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 12 ராசிகளில் ஏற்பட போகும் மாற்றம் பற்றிக் காணலம்.

12 ராசிகளுக்குமான பலன்கள்

  1. மேஷம்: இந்த ராசிக்கு பணத்தின் அதிபதியான சுக்கிரன், லாபத்தின் வீட்டில் சஞ்சரிப்பதால், நிதி நிலைமை முன்பை விட மிகவும் மேம்படும். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். திடீர் நிதி ஆதாயத்திற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும். திருமணம் தொடர்பான பிரச்சினைகள் தீர்வு பெறும். பங்குகள் மற்றும் முதலீடுகள் மிகவும் லாபகரமாக அமையும். சம்பள உயர்வு, வேலை வாய்ப்புகள் தொழில், ஆகியவை எதிர்பார்த்தபடி அமையும்.
  2. ரிஷபம்: இந்த ராசிக்கு அதிபதியான சுக்கிரன் அதே ராசியில் சஞ்சரிப்பதால்,மாலவ்ய மகா புருஷ யோகம் உள்ளது. இதனால் ஏழையாக இருக்கும் ராசிக்காரர்கள் கூட செல்வந்தர்களாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் மதிப்பு உயரும். வேலையில் ராஜ யோகம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும். மனதின் இருக்கும் சில ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியம் மிகவும் சீராக இருக்கும். விரும்பிய திருமண வரன் அமையும்.
  3. மிதுனம்: இந்த ராசியின் ஐந்தாவது வீடான செலவின் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வாழ்க்கை முறை மாற்றம் பெறும். ஆடம்பர வாழ்க்கைக்கும் செல்வீர்கல். சுற்றுலா, விருந்து போன்ற இன்பச் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். ஆரோக்கியம் கணிசமாக மேம்படும். வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கை நித்திய பேரின்பம் போல இருக்கும். தொலைதூர இடத்தில் அமையும் திருமண வரனை ஏற்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் பிறப்பு தொடர்பாக செய்திகள் நிச்சயமாக கிடைக்கும்.
  4. கடகம்: இந்த ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். மனதின் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறும். பங்குகள், முதலீடுகள் போன்ற நிதி பரிவர்த்தனைகளால் நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்களின் மதிப்பு கணிசமாக அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பிரபலங்களுடன் லாபகரமான தொடர்புகள் ஏற்படும். சொத்து தகராறுகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். காதல் மற்றும் திருமண தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  5. சிம்மம்: இந்த ராசியின் பத்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், ராசிக்காரர்களுக்கு மாலவ்ய மகா புருஷ யோகம் அமையும். இதன் காரணமாக நற்பெயர்,அந்தஸ்து ஆகியவை அதிகரிக்கும். சமூகத்தில் ஒரு முக்கிய நபராக அங்கீகரிக்கப்படுவார்கள். வேலையில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். தொழிலில் வருமானம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நிலையான வருமானம் உண்டாகும்.
  6. கன்னி: இந்த ராசிக்கு அதிர்ஷ்ட வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க உள்ளார். இதனால் பல வகையான நற்பலன்களை கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாட்டுப் பயணம் செல்வீர்கள். ஊழியர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். தங்கள் தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். செல்வம் பல வழிகளில் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  7. துலாம்: சுக்கிரன் தனது சொந்த வீடு உட்பட எட்டாம் வீட்டில் நுழைவதால், கூடுதல் வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வர வேண்டிய பணம், பாக்கிகள் கையில் கிடைக்கும். நிதி சிக்கல்கள் தீரும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத வழிகளில் வருமானம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆடம்பர விஷயங்களுக்கு நிறைய செலவு செய்வீர்கள். சொத்து தகராறுகள் தீர்க்கப்படும்
  8. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன் வருகிறது. இதனால் மாளவ்ய மகா புருஷ யோகத்தை உருவாகிறது. இதன் காரணமாக செல்வம் பெரிதும் அதிகரிக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். பணக்கார பின்புலத்தைச் சேர்ந்த குடும்பத்துடன் திருமண வரன் மற்றும் காதல் உறவு ஏற்படும். திருமண வாழ்க்கையில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, தம்பதியினருல் பரஸ்பரம் அதிகரிக்கும்.
  9. தனுசு: இந்த ராசிக்கு ஆறாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக நிதி, தனிப்பட்ட மற்றும் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக மீள்வீர்கள். பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சொத்து தகராறுகள் தீர்க்கப்படும், மதிப்புமிக்க சொத்துக்கள் கைக்கு வரும். விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
  10. மகரம்: இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தொழில் மற்றும் வேலைகளில் மட்டுமல்ல, சமூக அந்தஸ்தும் உயரும். பங்குகள், முதலீடுகள், நிதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். பிரபலங்களுடனான தொடர்புகள் அதிகரிக்கும். வேலையில் சிறந்து விளங்குவீர்கள். புதிய திறன்களைப் கற்பீர்கள். குழந்தைகள் நன்றாக வளர்வார்கள். குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  11. கும்பம்: இந்த ராசியின் நான்காம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் மாலவ்ய மகா புருஷ யோகத்துடன் சேர்ந்து, திக்பல யோகமும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினைகள் சாதகமாகத் தீர்க்கப்படும். தொழில் மற்றும் வேலைகளில் மட்டுமல்லாது, சமூக ரீதியாகவும், ஒரு சிறப்புமிக்க நபராக அங்கீகரிக்கப்படுவீர்கள். அதிகார யோகம் உருவாகும். காதல் விவகாரங்கள் மற்றும் திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.
  12. மீனம்: இந்த ராசியின் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் நுழைவதால் எதிர்பாராத வருமான வளர்ச்சி ஏற்படும். குறைந்த முயற்சியில் அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். பல வழிகளில் செல்வம் வளரும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடமிருந்து பணம் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். எடுக்கும் எந்த முயற்சியும் நிச்சயமாக நிறைவேறும். தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் உள்ளது. இவற்றிற்கு அறிவியல் விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)