திரிஷா முதல் சாய் பல்லவி வரை.. தேர்தலில் வாக்களித்த தமிழ் நடிகைகள்! | TV9 Tamil News

திரிஷா முதல் சாய் பல்லவி வரை.. தேர்தலில் வாக்களித்த தமிழ் நடிகைகள்!

Updated On: 

23 Apr 2026 20:32 PM

 IST

Tamil Actresses Vote in 2026 TN Assembly Elections: தமிழ்நாட்டில் இன்று 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் பல்வேறுநடிகர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்த நிலையில், தமிழ் நடிகைகள் யார் யார் தங்களின் ஜன நாயகக் கடமையை நிறைவு செய்துள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் இன்று (23/04/2026) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், தனது தாயுடன் சென்று வாக்குப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து, அர்ஜுனரு வில்லு என்ற பாடலை வைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் இன்று (23/04/2026) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், தனது தாயுடன் சென்று வாக்குப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து, அர்ஜுனரு வில்லு என்ற பாடலை வைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

2 / 5

தமிழ் நாயகியாக இருந்தாலும், பாலிவுட் சினிமாவிலும் கலக்கிவருபவர் சாய்பல்லவி. இவர் 2026ம் ஆண்டு தேர்தலில் வாக்கு செலுத்தியுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வாக்குச்சாவடியில், தனது ஜன நாயகக் கடமையில் செலுத்தியுள்ளார். பின் ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்து மகிழ்திருந்தார்.

3 / 5

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகையாக இருந்தாலும், தற்போது முழுமையாக் தமிழகத்தில் குடியேறிவிட்டார். அந்த வகையில் இவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தியுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

4 / 5

நடிகர் அஜித் குமார், காலையில் முதல் வாக்காக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தியிருந்தார். அதன் பிறகு அவரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் குமாரும் தனது ஜன நாயகக் கடமையை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது ஜன நாயகக் கடமையை நிறைவேற்றும் விதத்தில், தியாகராய நகரில் உள்ள தனது வாக்குச்சாவடியில், தனது சகோதரருடன் சென்று வாக்கை செலுத்தியிருந்தார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும் தனது ஜன நாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us