பரந்து விரிந்த தேயிலை தோட்டம்.. மலை பாங்கான நிலப்பரப்பு.. சம்மர் சுற்றுலாவுக்கு இங்க விசிட் அடிங்க! | TV9 Tamil News

பரந்து விரிந்த தேயிலை தோட்டம்.. மலை பாங்கான நிலப்பரப்பு.. சம்மர் சுற்றுலாவுக்கு இங்க விசிட் அடிங்க!

Updated On: 

04 Mar 2026 14:27 PM

 IST

Kotagiri Tourist Spot: தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில், மலை பாங்கான நிலப்பரப்பில் குளிர்ச்சியான மலை பிரதேசத்தில் சுற்றுலா செல்ல வேண்டுமா.. அப்பெடியென்றால் வருகிற சம்மர் சீசனுக்கு இந்த இடத்துக்கு சுற்றுலா செல்லுங்கள். ரம்மியாகக காட்சி அளிக்கும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோத்தகிரி.

1 / 5நீலகிரி மாவட்டத்தில் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது கோத்தகிரி.  இங்கு,  உதகமண்டலம் மற்றும் குன்னூருக்கு அடுத்தப் படியாக அதிகமான தேயிலை தோட்டங்கள்,  மலை பாங்கான நிலப்பரப்பு  ஆகியவை அமைந்துள்ளது.  மேலும்,  இந்த பகுதியில் சீதோசனமான குளிர்ச்சியான காலநிலை  நிலவி வருகிறது. இதனால் இங்கு  சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் ஒரு இதமான  சூழலை  உணரலாம்.  மேலும் இந்த பகுதியில்  சுமார் 1,793 மீட்டர் உயரத்தில்  கோடநாடு காட்சி முனை,  கேத்தரின்  நீர் வீழ்ச்சி  ஆகியவை அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது கோத்தகிரி. இங்கு, உதகமண்டலம் மற்றும் குன்னூருக்கு அடுத்தப் படியாக அதிகமான தேயிலை தோட்டங்கள், மலை பாங்கான நிலப்பரப்பு ஆகியவை அமைந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் சீதோசனமான குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் ஒரு இதமான சூழலை உணரலாம். மேலும் இந்த பகுதியில் சுமார் 1,793 மீட்டர் உயரத்தில் கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர் வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளது.

2 / 5

இந்த கோடநாடு காட்சி முனையில் மலைகளை உரசியவாறு செல்லும் மேகக் கூட்டங்கள், அதன் உச்சியில் இருந்து சற்று கீழே பார்த்தால் பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சி நம் மனதில் நீங்கா இடமாக பதிந்து விடும். இதே போல, கேத்தரின் நீர்வீழ்ச்சியில் 250 அடி உயரத்திலிருந்து பூமி நோக்கி விழும் தண்ணீரை பார்க்கும் போது ஒருவித புத்துணர்ச்சி எழும். நீலகிரியின் 2- மிக உயரமான நீர்வீழ்ச்சியாக கேத்தரின் நீர்வீழ்ச்சி இருந்து வருகிறது. இங்கு 2 அருவிகளின் வழியாக தண்ணீர் வந்து ஒரே நீர்வீழ்ச்சியாக விழுகிறது.

3 / 5

இதை பார்த்துவிட்டு அப்படியே சற்று நகர்ந்தால் லாங்வுட் ஷோலா காடுகள் நம் கண்களுக்கு தென்படும். இந்த காட்டுப் பகுதியில் சற்று காலாற நடந்து சென்று இயற்கையோடு உறவாடலாம். இந்த பகுதி சிறந்த நடை பயணத்திற்கான இடமாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாகவும், தென்னிந்தியாவின் 3- ஆவது குளிர் மலைவாழ் இடமாகவும் கோத்தகிரி திகழ்ந்து வருகிறது.

4 / 5

தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில், டென்ஷன் இன்றி இதமான கால நிலை மற்றும் குளிர்ச்சியான சீதோசன நிலையை அனுபவிப்பதற்கு சிறந்த இடமாக திகழ்கிறது கோத்தகிரி சுற்றுலா தலம். மேலும், டிரக்கிங் செல்ல விரும்புபவர்கள் இந்த லாங் வுட் ஷோலா பகுதியில் மலை ஏற்றம் மேற்கொள்ளலாம். இதே பகுதியில் அமைந்துள்ள ரங்கசாமி சிகரத்துக்கு சென்றால் நமது டென்ஷனான வாழ்வை மறந்து இதன் அழகில் மயங்கி விடுவது உறுதி. ஏனென்றால் இந்த பகுதி அழகுடன் சேர்ந்து ஆன்மீக அனுபவத்தையும் நமக்குத் தரும்.

5 / 5

இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள கோத்தகிரி, நீலகிரியில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1 மணி நேர பயணத்தில் ஊட்டி- தொட்டபெட்டா - கோத்தகிரி அல்லது குன்னூர் வழியாக சென்றடையலாம். நெருங்கி வரும் சம்மர் சீசனில் குளிர்ச்சியான மலைப் பகுதிக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் கோத்தகிரிக்கு ஒரு முறை சென்று வாருங்களேன்...!

Follow Us