தன்னிறைவு பெற்ற இந்தியா.. பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் – பிரதமர் மோடி..

PM Modi: பிரதமர் மோடி, : “நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது. அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளான நாளை, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது” என பேசியுள்ளார்.

தன்னிறைவு பெற்ற இந்தியா.. பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் - பிரதமர் மோடி..

பிரதமர் மோடி

Updated On: 

21 Sep 2025 19:19 PM

 IST

டெல்லி, செப்டம்பர் 21, 2025: செப்டம்பர் 22, 2025 என்ற நாளை முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21, 2025) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது, “அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகிறது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை மேலும் துரிதப்படுத்தும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி போட்டியில் சம பங்காளியாக மாற உதவும்.

பல தசாப்தங்களாக நமது நாட்டின் மக்களும் வணிகர்களும் பல்வேறு வரிகளின் வலையில் சிக்கித் தவித்தனர் – நுழைவு வரி, விற்பனை வரி, கலால் வரி, வாட், சேவை வரி என பல வகையான வரிகள் இருந்தன. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல எண்ணற்ற சோதனை சாவடிகள் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு அவை அனைத்தும் மாறின” என்றார்.

மேலும் படிக்க: 2025ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்… நேரம் என்ன? இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

தண்ணிறைவு பெற்ற இந்தியா:


மேலும் அவர், “நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது. அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளான நாளை, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டியில் 6 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரிகள் மட்டுமே பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும்.

மேலும் படிக்க: எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்; தொண்டர்களின் நிலை என்ன? – தமிழிசை சௌந்தராஜன்

சாமானிய மக்கள் பயன்படும் 99% பொருட்களின் வரி 5 சதவீதத்திற்குள் வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், விவசாயிகள் குறைந்த விலையில் பொருட்களைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.

 

Follow Us
Related Stories
பீகாரில் முதல்முறையாக பாஜக ஆட்சி மலர்ந்தது.. முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி.. அரசியலில் புதிய சகாப்தம்!!
தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர் யார்?
கண்ணியம் இல்லாமல் வாழ முடியாது.. எயிட்ஸ் பாதிப்பு ரத்தம் உடலில் செலுத்தப்பட்டதால் இளம் பெண் விபரீதம்!
ரூ.40 லட்சம் LPA.. திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் ரேபிடோ ஓட்டும் டெக்கி!
காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ
ரயில் மூலம் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள்... துரிதமாக செயல்பட்டு மீட்கப்பட்ட சம்பவம்..
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!