Air India Crash : ஏர் இந்தியா விபத்து.. உயிரிழந்த அனைவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
Ahmedabad Air India Crash | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உடல் கருகி உயிரிழந்த அனைவரது உடல்களும் டிஎன்ஏ மாதிரிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ள்ளது. ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனைவரது உடலும் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
குஜராத், ஜூன் 30 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் (Ahmedabad Air India Flight Crash) உயிரிழந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்த நிலையில், கடைசி ஒருவரின் உடலும் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நபரின் உடலை அடையாளம் காண்வதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், அவரது உறவினர்களிடம் இருந்து இரண்டு முறை டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய விமானம்
குஜராத் (Gujarat) மாநில அகமதாபாத்தில் (Ahmedabad) உள்ள சர்வதேசமான விமான நிலையத்திலிருந்து ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு சில நொடிகளில் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியின் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த கோர சம்பவத்தில், விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பிய நிலையில், மீதமுள்ள 241 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
ஏர் இந்தியா விமான விபத்து
Air India AI171 Plane Crash: What We Know Till Now
A THREAD 🧵
1/
A shocking tragedy unfolded in Ahmedabad yesterday. Air India flight AI171, a Boeing 787-8 Dreamliner bound for London Gatwick, crashed shortly after takeoff with 242 people on board pic.twitter.com/tQXY4pIVHC— Jami (@expertwith_AI) June 23, 2025
டிஎன்ஏ மூலம் உடல்கள் கண்டுபிடிப்பு
ஏர் இந்தியா விபத்தில் பயணிகள் அனைவரும் உடல் கருகி பலியான நிலையில் அவர்களது உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் டிஎன்ஏ மாதிரிகள் மூலம் உடல்களை அடையாளம் காண்பதற்காக முடிவு செய்யப்பட்டு உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு உடலாக அடையாளம் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 35 வயதான அணில் கிமானி என்பவரின் உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்து வந்தது. அவரது உறவினர்களிடமிருந்து இரண்டு முறை டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஜூன் 27, 2025 அன்று அவரது உடலும் அடையாளம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.