பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம்…16 ஆண்டு கால தாமதத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்!
Acid Attack Investigation Delay: பெண் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் 16 ஆண்டு கால விசாரணைக்கான தாமதத்தை உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இது ஒரு அவமானமான செயல் என்று கருத்து தெரிவித்தது.

ஆசிட் வீச்சு வழக்கில் நீதிமன்றம் கண்டனம்
டெல்லியில் கடந்த 2009- ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான வழக்கு ரோகிணி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் நடைபெற்று 16 ஆண்டுகள் ஆன நிலையில் விசாரணையின் தாமதத்தை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 4) வியாழக்கிழமை கடுமையாக கண்டித்தது. அப்போது, இது ஒரு அவமானம் மற்றும் அமைப்பை கேலி செய்வது என்று கூறியது. டெல்லியில் உள்ள ரோகிணி விசாரணை நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேசிய தலைநகரம் அத்தகைய சூழ்நிலையைக் கையாள முடியாவிட்டால், யார் செய்வார்கள்? இது மிகவும் அவமானம் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.
2009- இல் நடைபெற்ற ஆசிட் வீச்சு சம்பவம்
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அந்த பெண் மீது ஆசீட் வீச்சு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அவரது உறவினர்கள் துன்பப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி காந்த், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதா என்று கேட்டார். குற்றவியல் வழக்கு புது தில்லியில் உள்ள ரோகிணி விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருப்பதை வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.
மேலும் படிக்க: வி ஜ பி நம்பர் பிளேட்டால் வந்த வினை…சிக்கலில் மாட்டிய தனியார் நிறுவன இயக்குநர்!
அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவு
அப்போது, பல ஆண்டு கால தாமதம் வெட்கக்கேடானது என்றும், அமைப்பின் கடுமையான தோல்வியை இது பிரதிபலிக்கிறது என்றும் தலைமை நீதிபதி கூறினார். பின்னர், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஒவ்வொரு ஆசிட் தாக்குதல் வழக்கு விசாரணையின் விவரங்களையும் சமர்ப்பிக்க அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடுகிறோம் என்று கூறினார். மேலும், வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நல்லுதவி வேண்டும்
விசாரணையின் போது, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் (எஸ்ஜி) துஷார் மேத்தா, சூழ்நிலையின்படி குற்றவாளி இங்கு நிகழ்த்தப்பட்ட அதே கொடூரத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் தலைமை நீதிபதி காந்த், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கத்தின் தரப்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று எஸ்.ஜி.யிடம் கேட்டார். அதன்மூலம் அந்தப் பெண் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறையில் சேர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இந்தியாவில் ஒரே ஆண்டில் 8. 5 லட்சம் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல்…என்ன காரணம் !