இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி.. ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்..

இந்த முயற்சி, நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு பாரம்பரிய ஹத யோக அறிவை வழங்க வேண்டும் என்ற சத்குரு அவர்களின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.  பயிற்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள், இந்த பயிற்சி யோகாவை ஒரு சக்திவாய்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்பமாக அனுபவிக்க உதவியது என தெரிவித்தார். இது உடல் தாங்கும் திறன், மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது என கூறினர்.

இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி..  ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்..

கோப்பு புகைப்படம்

Published: 

06 Apr 2026 15:59 PM

 IST

ஏப்ரல் 6, 2026: சத்குரு குருகுலம் நடத்திய இந்திய பாதுகாப்புப் படையினருக்கான 15 நாள் பாரம்பரிய ஹத யோகா “Train the Trainer” பயிற்சி திட்டம் இன்று ஈஷா யோகா மையத்தில் நிறைவடைந்தது. இந்த பயிற்சியில் மொத்தம் 99 பாதுகாப்புப் படை வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 78 பேர் இந்திய கடற்படையிலிருந்தும், 21 பேர் இந்திய ராணுவத்திலிருந்தும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தீவிரமான பயிற்சியை முடித்து, தங்களது தளங்களில் உள்ள மற்ற படைவீரர்களுக்கும் இந்த யோகப் பயிற்சிகளை கற்பிக்க தயாராக உள்ளனர் என தெரிவித்தனர்.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்ற இந்த பயிற்சியில், உபா யோகா, சூர்ய க்ரியா, அங்கமர்தனா மற்றும் Inner Engineering Online போன்ற பாரம்பரிய யோகப் பயிற்சிகள் ஆழமாக கற்பிக்கப்பட்டன. இந்த பயிற்சிகள் மூலம் உடல் மாற்றம், உள்ளார்ந்த சமநிலை மற்றும் இந்த அறிவை மற்றவர்களுடன் பகிரும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்ன?

இந்த முயற்சி, நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு பாரம்பரிய ஹத யோக அறிவை வழங்க வேண்டும் என்ற சத்குரு அவர்களின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.  பயிற்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள், இந்த பயிற்சி யோகாவை ஒரு சக்திவாய்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்பமாக அனுபவிக்க உதவியது என தெரிவித்தார். இது உடல் தாங்கும் திறன், மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது என கூறினர்.

ஸ்ரீகாந்த் ஜோஷி  (கேப்டன், இந்திய கடற்படை) கூறுகையில், “இந்த ஹத யோகா ஆசிரியர் பயிற்சி மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது: உடல் வலிமை, மன அமைதி மற்றும் உள்ளார்ந்த ஆராய்ச்சி. இந்த உள்ளார்ந்த அமைதியை வளர்த்துக் கொண்டால், ஒருவர் சூழ்நிலைகளை தெளிவாக உணர்ந்து, அழுத்தமான சூழல்களிலும் அமைதியாக செயல்பட முடியும்” என தெரிவித்தார். அவர் மேலும், இந்த பயிற்சி தங்களது பிரிவுகளில் உள்ள பலருக்கும் இந்த பயிற்சிகளை கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார்.

ராகுல் ஜெய்ஸ்வால் (கமாண்டர்) கூறுகையில், “யோகாவின் உண்மையான அர்த்தம் வெளியில் அல்ல, உள்ளே பார்க்கும் செயலாகும். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ‘Inner Engineering’ தான்” என தெரிவித்தார். இந்த பயிற்சி தங்களை நன்றாக புரிந்துகொள்ளவும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது என தெரிவித்தார்.

யோகப் பயிற்சிகளுக்கு அப்பாற்பட்டு, பங்கேற்பாளர்கள் ஈஷா வித்யா பள்ளியையும் பார்வையிட்டனர். மேலும் ஆசிரமத்தையும் சுற்றிப் பார்த்ததுடன், தியான லிங்கம், லிங்க பைரவீ தேவி மற்றும் தீர்த்தகுண்டங்களில் நேரம் செலவிட்டனர்.  நன்றியறிதலின் அடையாளமாக, பங்கேற்பாளர்கள் Biksha Hall-ல் அன்னதானம் வழங்கி, சாதகர்களுக்கு உணவு வழங்கினர்.

தனது நினைவில் நிற்கும் அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீகாந்த் ஜோஷி கூறுகையில்,
“இஷா மையத்தில் கிடைத்த பராமரிப்புக்கு நன்றி செலுத்தும் வகையில், அன்னதானம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிறருக்கு உணவு வழங்கிய அந்த அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் இணைப்பையும் அளித்தது” என தெரிவித்தார்.

Follow Us
Related Stories
மனைவியை கொலை செய்து இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நபர்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
ஐடி டூ முதலீட்டு வங்கியாளர்.. ஐஐஎம்பி-யில் தங்கப் பதக்கம் வென்று த்வீத் மேத்தா சாதனை
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்