21 வயதில் நகராட்சி தலைவரான மாணவி…எந்த ஊரில்…யார் இவர்!

21 Year Old Student Took Oath Municipal Chairperson: கேரள மாநிலத்தில் 21 வயதான எம். பி. ஏ. மாணவி நாட்டின் இளம் வயது நகராட்சி தலைவராக பதவி ஏற்று உள்ளார் . இவர், மற்றொறு சாதனையையும் நிகழ்த்தி உள்ளார்.

21 வயதில் நகராட்சி தலைவரான மாணவி...எந்த ஊரில்...யார் இவர்!

நகராட்சி தலைவரான ரியா பினு புலிகண்டம்

Published: 

26 Dec 2025 14:02 PM

 IST

கேரள மாநிலம், கோட்டையத்தைச் சேர்ந்தவர் தியா பினு புலிகண்டம். 21 வயதான இவர், நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை பினு பாலா 20 ஆண்டுகளாக நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். கேரளா காங்கிரஸில் எம் இன் இளைஞர் பிரிவான இளைஞர் முன்னணி எம் இன் மாநில துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் முதன் முதலில் நகராட்சி மன்ற உறுப்பினர் ஆன போது, காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் 2015- ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து வெற்றி பெற்றார். பின்னர், பினு பாஜகவை விட்டு வெளியேறி சிபிஎம்-இல் இணைந்து அங்கும் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவரது மகள் தியா பினு புலிகண்டம் 15- ஆவது வார்டில் போட்டியிட்டார்.

எம்பிஏ மாணவியான தியா

மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த தியா, எம் பி ஏ படிக்க தயாராகிக் கொண்டிருந்த போது, தேர்தலுக்காக கோடாவுக்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்ற தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த நகராட்சி தேர்தலில் தியா பினு புலிகண்டம் நகராட்சி தலைவராக வெற்றி பெறுவார் என்ற எண்ணம் இருந்தது.

மேலும் படிக்க: தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.. 3 நாள் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன?

நாட்டின் இளம் நகராட்சி தலைவர்

அதன்படி, தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில், நகராட்சி தலைவராக தியா பினு புலிகண்டம் வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் இளைய நகராட்சி தலைவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், 26 வயதில் கொண்டோட்டி நகராட்சி தலைவராக பதவி வகித்த நிதா ஷாஹீரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

மகளுடன் போட்டியிட்ட தந்தை

முன்பு ஜோஸ் கே. மணியை தொடர்ந்து விமர்சித்ததாக பினு பிரபலமாக பேசப்பட்டார். ஜோஸுக்கு எதிரான அவரது நிலைப்பாடு தான் பினு சி பி எம்- ஐ விட்டு வெளியேற வழி வகுத்தது. இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு பினு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார் என்பது அவரது பாலாவின் ஆர்வமாக இருந்தது.

தற்செயலாக போட்டியிட்ட மூவரும் வெற்றி

ஆனால், பினு தனது மகள் மற்றும் சகோதரர் பிஜுவுடன் போட்டியிட வந்தது முற்றிலும் எதிர்பாராததாக அமைந்தது. தற்செயலாக போட்டியிட்ட மூவரும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் பினு தனது அரசியல் பலத்தை மீண்டும் நிரூபித்து இருந்தார். இந்த தேர்தலில் புலி கண்டம் குடும்பத்திற்கு எதிரான யூடிஎஃப் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

மேலும் படிக்க: சுனாமி தாக்குதலை எதிர்கொள்ள புதிய முயற்சி…தயார் நிலையில் 100 கிராமங்கள்…எங்கு தெரியுமா!

Follow Us
Related Stories
பீகாரில் முதல்முறையாக பாஜக ஆட்சி மலர்ந்தது.. முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி.. அரசியலில் புதிய சகாப்தம்!!
தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர் யார்?
கண்ணியம் இல்லாமல் வாழ முடியாது.. எயிட்ஸ் பாதிப்பு ரத்தம் உடலில் செலுத்தப்பட்டதால் இளம் பெண் விபரீதம்!
ரூ.40 லட்சம் LPA.. திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் ரேபிடோ ஓட்டும் டெக்கி!
காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்