Vijay Sethupathi : விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் இணையும் படத்தின் நியூ அப்டேட்!
Vijay Sethupathi Telugu Movie Update : தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்திலிருந்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அது குறித்தது பார்க்கலாம்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) , தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் படங்களைத் தாண்டி, இந்தி மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தெலுங்கில் ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கிவருகிறார். இப்படத்தின் முதல் அறிவிப்புகள் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடங்களில் தபு (Tabu) மற்றும் சம்யுக்தா (Samyuktha) இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படமானது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகிவருகிறதாம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இப்படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்தில் அவருடன் ஜெபி மோஷன் பிக்ச்சர்ஸ் (JB Motion Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலாவும் இணைந்து தயாரிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.




விஜய் சேதுபதி தெலுங்கு பட நியூ அப்டேட் பதிவு :
Two powerhouses. One explosive vision 🔥@PuriConnects collaborates with #JBMotionPictures for the most ambitious project #PuriSethupathi ❤️🔥
Produced by Puri Jagannadh, Charmme Kaur and #JBNarayanRaoKondrolla 💥
Presented by @Charmmeofficial
CEO @IamVishuReddy
Releases in… pic.twitter.com/5v98L4TMUn
— Puri Connects (@PuriConnects) June 30, 2025
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி :
நடிகர் விஜய் சேதுபதி, இந்த படத்திற்கு முன் தெலுங்கில் உப்பேனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.மேலும் அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்த படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கில் ஹீரோவாகும் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளார்.
இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இந்த புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் நடந்துமுடிந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் தமிழ்ப் படங்கள் :
விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக ஏஸ் படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025, மே 23ம் தேதியில் வெளியான இப்படம் அந்த அளவிற்கு வரவேற்புகளைப் பெறவில்லை. அதை தொடர்ந்து இவரின் நடிப்பில் மட்டும் தமிழில் இரு படங்கள் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டி ராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படமானது வரும் 2025, ஜூலை 24ம் தேதியில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்திலும் நடித்துள்ளார். இப்படமும் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.