EPFO 3.0 : விரைவில் நடைமுறைக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0.. இத்தனை சிறப்பு அம்சங்களா?

EPFO 3.0 Will Launch Soon | இந்தியாவில் உள்ள அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2.0 மூலம் பயனடைந்து வரும் நிலையில், விரைவில் இபிஎஃப்ஓ 3.0 அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO 3.0 : விரைவில் நடைமுறைக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0.. இத்தனை சிறப்பு அம்சங்களா?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Jun 2025 16:04 PM

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறையில் பணிபுரிய ஊழியர்கள்,  ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) 2.0  திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு சேவைகள் எளிதாக சென்றடையும் வகையிலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தை, ஊழியர்கள் மிக எளிதாக பயன்படுத்தும் வகையிலும் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு என்ன என்ன சிறப்பு அம்சங்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் நடைமுறைக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்படும். அந்த பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு பிஎப் பணத்தை எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

அதாவது இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான அனுமதி பெற்று அதன் பிறகு, 10 முதல் 15 நாட்கள் வரை பிஎப் பணம் வங்கி கணக்கிற்கு வருவதற்காக காத்திருக்க வேண்டும். இது மிக நீண்ட நடைமுறையாக உள்ள நிலையில், அதனை எளிதாகவும் மேலும் சில அம்சங்களை ஊழியர்கள் எளிதாக பெரும் வகையில் இந்த இபிஎப்ஓ 3.0 திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது ஜூன் 2025-ல் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ 3.0-ல் இத்தனை சிறப்பு அம்சங்களா?

  • தற்போதைய சூழலில் பிஎஃப் கணக்கில் இருந்து பண எடுக்க வேண்டும் என்றால் அதற்காக விண்ணப்பித்து, அந்த பணம் பிஎஃப் கணக்குக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இபிஎஃப்ஓ 3.0 மூலம் பிஎஃப் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நிலையில் அதனை ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் எடுத்துக்கொள்ளலாம்.
  • ஊழியர்கள் தங்களது கணக்கு விவரங்கள் உள்ளிட்ட மற்ற விவரங்களை ஓடிபி மூலமே மொபைல் போன் மூலமாக மிக சுலபமாக செய்து முடித்து விடலாம்.
  • பிஎஃப் கணக்கின் இருப்பு சரிபார்ப்பு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பணத்தை திரும்ப பெறுதல் போன்ற வசதிகளையும் இந்த இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தில் பெற முடியும்.

இபிஎஃப்ஓ 2.0 திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்த இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தில் மிக எளிதாகவும், சுலபமாகவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.