அதிகாலையில் பதற்றம்.. ஈரானை கடுமையாக தாக்கிய இஸ்ரேல்… என்ன நடக்கிறது?

Israel Iran Conflict : ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியுள்ளது. ஆபரேஷன் ரைசிங் லையன் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. அமெரிக்காவில் உதவி இல்லாமலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது பதற்றத்தை கிளப்பியுள்ளது.

அதிகாலையில் பதற்றம்.. ஈரானை கடுமையாக தாக்கிய இஸ்ரேல்... என்ன நடக்கிறது?

ஈரான் மீது தாக்குதல்

Updated On: 

13 Jun 2025 09:13 AM

ஈரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது (Israel Attacks Iran) பதற்றத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே (Israel Iran Conflict) போர் பதற்றம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ராணுவத் தலைவர் உள்பட பலரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “சில நிமிடங்களுக்கு முன்பு, இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இது இஸ்ரேலின் உயிர்வாழ்விற்கான ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும்.

ஈரானை கடுமையாக தாக்கிய இஸ்ரேல்

இந்த நடவடிக்கை பல நாட்களுக்கு தொடரும். எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகள் தாக்குகின்றனர். இப்போது செயல்படவில்லை என்றால் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்” என்றார். ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்தார். இஸ்ரேல் மற்றும் பொது மக்கள் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.

ஈரான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் பதற்றத்தை அடுத்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் தங்கள் வான்வெளிகளை மூடிவிட்டன. எனவே, இந்த நேரத்திலும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.

உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர்

அணு ஆயுத நிலையங்களை குறி வைத்தது ஏன்?

இஸ்ரேலுக்கு ஈரானுக்கு பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தற்போது இந்த மோல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று ஈரானின் ஆணு ஆயுத நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய உள்ளது. ஈரானை அணு ஆயுதங்களை தயாரிக்க விடமாட்டோம் என்று இஸ்ரேல் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று பலமுறை கூறியுள்ளது. மின்சாரம் மற்றும் மருத்துவ அறிவியலுக்கு மட்டுமே அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஈரான் கூறுகிறது. இருப்பினும், ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து முயற்சித்து வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றால், அது இஸ்ரேலுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். இதனால், அணு ஆயுதங்களை தயாரிக்க இஸ்ரோ எதிர்க்கிறது. அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டவில்லை என்றால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என பலமுறை டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த சூழலில் தான், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்றும் இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஈரான் மீது இந்தத் தாக்குதலை நடத்தியது என்றும் கூறியுள்ளார்.