டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்..
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, டெல்லி சென்றடைந்த விஜய்க்கு டெல்லி போலீசார் Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் டெல்லி சிபிஐ அலுவலகம் முன் தவெக தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, டெல்லி சென்றடைந்த விஜய்க்கு டெல்லி போலீசார் Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் டெல்லி சிபிஐ அலுவலகம் முன் தவெக தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.