ஊட்டியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த மினி பஸ்.. காவல்துறையினர் விசாரணை!

Jan 07, 2026 | 10:08 PM

ஊட்டியிலிருந்து சென்ற ஒரு தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மணலாடா அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 32 பயணிகள் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, பாலடா கிராம சுகாதார மையத்தில் முதலுதவி அளித்து, உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஒருவரின் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஊட்டியிலிருந்து சென்ற ஒரு தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மணலாடா அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 32 பயணிகள் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, பாலடா கிராம சுகாதார மையத்தில் முதலுதவி அளித்து, உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஒருவரின் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.