தஞ்சையில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு.. இரண்டு பேர் கைது..

| Jun 19, 2025 | 6:07 PM

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தொட்டி மாத்தூர் கிராமத்தில் தந்தை, மகனை சரமாரியாக வெட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அய்யம்பேட்டை அருகே தொட்டிமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ஆனந்த் (வயது 29) மற்றும் திருச்சோற்றுத்துறை சாலை தெருவை சேர்ந்தவர் முத்தையன் மகன் வினோத்குமார் (வயது 38). இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த முன்பகை காரணமாக ஆனந்த வீட்டிற்கு சென்ற வினோத்குமார் மற்றும் உறவினர், ஆனந்தையும் அவரது தந்தை அன்பழகனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தொட்டி மாத்தூர் கிராமத்தில் தந்தை, மகனை சரமாரியாக வெட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அய்யம்பேட்டை அருகே தொட்டிமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ஆனந்த் (வயது 29) மற்றும் திருச்சோற்றுத்துறை சாலை தெருவை சேர்ந்தவர் முத்தையன் மகன் வினோத்குமார் (வயது 38). இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த முன்பகை காரணமாக ஆனந்த வீட்டிற்கு சென்ற வினோத்குமார் மற்றும் உறவினர், ஆனந்தையும் அவரது தந்தை அன்பழகனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published on: Jun 19, 2025 06:05 PM