நாமக்கலில் கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய விசாரணை தேவை! அண்ணாமலை கோரிக்கை!

Jul 19, 2025 | 11:28 PM

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 19ம் தேதி ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, “நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண மக்களை ஏதோ ஒன்றை கூறி ஏமாற்றி சிறுநீரக திருட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சிலர் இதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு எஸ்.ஐ.டி என்னும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து உண்மையை வெளியே கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.” என்று தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 19ம் தேதி ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, “நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண மக்களை ஏதோ ஒன்றை கூறி ஏமாற்றி சிறுநீரக திருட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சிலர் இதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு எஸ்.ஐ.டி என்னும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து உண்மையை வெளியே கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.” என்று தெரிவித்தார்.