வீக் எண்டில் சொந்த ஊருக்கு போறீங்களா? 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்.. உடனே முன்பதிவு பண்ணுங்க!
TNSTC Special Buses : வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை மூன்று நாட்களுக்கு இயங்கப்படுகிறது. குறிப்பாக, வேளாங்கன்னியில் சிறப்பு ஆலய வருடாந்திர விழாவையொட்டியும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பேருந்துகள்
சென்னை, ஆகஸ்ட் 20 : வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்துத் துறை (TNSTC Special Buses) சார்பில் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் (Weekend Special Buses) இயக்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய போக்குவரத்து வசதிகளில் ஒன்றாக இருப்பது பேருந்து சேவை. பேருந்து சேவை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் செல்வதற்கு மக்கள் தமிழக அரசு பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால், அவ்வப்போது தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் வார இறுதி நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது, 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருநது 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி 340 சிறப்பு பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Also Read : புது மெட்ரோ ரூட்.. சென்னை மக்களுக்கு அடுத்த சப்ரைஸ்.. தொடங்கும் பணிகள்!
3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். -அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation… pic.twitter.com/pZ2ndUK2Nb
— ArasuBus (@arasubus) August 19, 2025
2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் இருந்து இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கன்னி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களும் 55 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Also Read : பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!
2025 ஆகஸ்ட் 22,23ஆம் தேதிகளில் மொத்தமாக 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் TNSTC மொபைல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.