Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவர்கள் அலட்சியமாக இருந்தால் இதுதான் நடக்கும்.. அமைச்சர் எச்சரிக்கை

Minister Subramanian Warns Doctors: சென்னை ஜூன் 28 அன்று, சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் அலட்சியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். ராணிப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டு, பணியில் இல்லாத ஊழியர்களை இடைநீக்கம் செய்தார். மேலும், தமிழ்நாட்டில் 50 கிராம சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி அமைக்கப்படும் எனவும், அரசு மருத்துவமனைகளில் மக்கள் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவர்கள் அலட்சியமாக இருந்தால் இதுதான் நடக்கும்.. அமைச்சர் எச்சரிக்கை
அமைச்சர் எச்சரிக்கை Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 28 Jun 2025 11:08 AM

சென்னை ஜூன் 28: சென்னையில் (Chennai) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Minister M. Subramanian) மருத்துவர்களின் அலட்சியத்துக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்தார். ராணிப்பேட்டையில் ஹாஸ்பிட்டலில் (Govt. hospital in Ranipet) முன் அறிவிப்பு இல்லாமல் ஆய்வு (Sudden Visit) மேற்கொண்ட அவர், பணியில் இல்லாத மருத்துவர், செவிலியர், பாதுகாவலரை இடைநீக்கம் செய்தார். மாவட்ட சுகாதார அலுவலர்கள் தினசரி பணிகளை பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் 50 கிராம சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். இது நாட்டிலேயே முதன்மையாக தமிழ்நாட்டில் அமையும் திட்டம் எனக் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனைகளில் மக்கள் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மருத்துவர்களின் கவனக்குறைவுக்கு இனி பொறுப்பு கோரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில சுகாதார சேவைகள் மேம்பாட்டை நோக்கி சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வில், மருத்துவர்களின் பொறுப்பாள்மையின்மை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

தேனாம்பேட்டையில் மருத்துவ திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியீடு

தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அலுவலகத்தில், மருத்துவத்துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பு எண் 85 மற்றும் 110-ஐ நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், இயக்குநர்கள் அருண் தம்புராஜ், செல்வ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IHPI-IDSP) தொடர்பான பயிற்சி கையேடுகள் மற்றும் சர்வதேச பொது சுகாதார மாநாட்டிற்கான இலச்சினை, வலைதளம் மற்றும் கருப்பொருள் பாடல் வெளியிடப்பட்டன.

கிராமங்களிலும் டயாலிசிஸ் வசதி

நாட்டில் முதன்முறையாக, கிராம பகுதிகளுக்கும் டயாலிசிஸ் இயந்திரங்களை கொண்டு செல்லும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது. 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி விரைவில் அமையவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். இது கிராம மக்கள் நலனை நோக்கிய முன்னேற்றமான புதிய முயற்சி என்று தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மருத்துவமனையில் ஆய்வு

மருத்துவர்களின் அலட்சியம் – அமைச்சர் நேரில் கண்டித்த சம்பவம்

அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னறிவிப்பில்லாமல் ராணிப்பேட்டை மேல்விஷாரம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, காலை 8 மணிக்கே மருத்துவர்கள் பணியில் இல்லாத நிலையை நேரில் கண்டறிந்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்து, அங்கு பணியாற்றிய மருத்துவர், செவிலியர் மற்றும் பாதுகாவலரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

மாவட்ட சுகாதார அலுவலர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்

“நான் வருகிறேன் என்றால் தான் வேலை செய்யக் கூடாது. ஒவ்வொரு மாவட்ட சுகாதார அலுவலரும் தங்களுடைய பகுதியை தினசரி கண்காணிக்க வேண்டும்” என அமைச்சர் கண்டித்தார். “நான் தோழமையாக செயல்படுகிறேன். ஆனால், செயல்களில் கவனக்குறைவு இருந்தால் பணி நீக்கம் செய்வதற்கும் தயங்கமாட்டேன்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அரசு மருத்துவ சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை

அரசு மருத்துவ சேவைகள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் வருகை தரும் நோயாளிகள் எண்ணிக்கை 7,000-8,000ல் இருந்து தற்போது 14,000ஆக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் பெருமையுடன் தெரிவித்தார்.