மா விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..
TN CM M.K. Stalin Letter: மாம்பழம் விவசாயிகளின் நலனை காக்க சந்தை தேவையை ஏற்படுத்த போதிய நடவடிக்கை வேண்டும் என்றும் ஜி.எஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மா விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் போதிய சந்தை தேவையை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் (TN CM M.K Stalin) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) கடிதம் எழுதியுள்ளார்.. 2025 ஆம் ஆண்டு தமிழகத்தில் மா விளைச்சல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான விலை ஒரு கிலோவிற்க ஐந்து ரூபாய்க்கு கோரப்பட்டதன் காரணமாக மா விவசாயிகள் பலரும் நஷ்டத்தில் ஆழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் மாங்காய் கனிகளை மரத்திலிருந்து பறிக்காமல் அப்படியே விட்டு விட்டதாகவும், ஒரு சிலர் மாம்பழத்தை பறித்து அதனை அழுகும் நிலைக்கு விட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க விற்பனையாகாத மாங்காய் கனிகளும் மாம்பழங்களையும் ஆற்றில் இருக்கக்கூடிய மீன்கள் மற்றும் சாலை ஓரம் சுற்றி திரியும் மாடுகளுக்கு வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.
9.49 மெட்ரிக் டன் மா உற்பத்தி:
இதன் காரணமாக மா விவசாயிகள் நஷ்டம் அடையாமல் போதிய சந்தை தேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர். மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாங்கனி தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 9.49 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அகில இந்திய அளவில் மாசாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அடிப்படையில் தமிழ்நாடு ஏழாவது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு காலநிலை சாதகமாக அமைந்ததன் காரணமாக மாம்பழ உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. மா விவசாயிகளின் துயரத்தைப் போக்க நடைமுறையில் உள்ள விற்பனை வளைக்கும் சந்தை தலையீட்டு விலைக்கும் உள்ள வேறுபாட்டை மத்திய அரசும் மாநில அரசுகளும் 50 க்கு 50 50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் சந்தை தலையிட்ட திட்டத்தின் கீழ் வித்தியாச தொகையினை செலுத்தும் வழிமுறைகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்:
🥭 மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் –
🥭 மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட #FSSAI தரக்கட்டுப்பாடுகளைக்… pic.twitter.com/WsmlBDKr0p
— M.K.Stalin (@mkstalin) June 24, 2025
மேலும் மாம்பழ சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச சேர்க்க வேண்டிய மாம்பழக்கூழ் அளவு உள்ளிட்ட FSSAI விதித்த கட்டுப்பாட்டை கடைப்பிடித்திட வழிகாட்டுதல் வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதம் குறைத்திட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.