Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

மருதமலை முருகன் கோயிலில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

Marudhamalai Murugan Temple: கோவை மருதமலைக்கு அருகே தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.1 கிலோ வெள்ளிவேல் சாமியார் வேடமணிந்து ஒருவரால் திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகள் வழியாக திருடியவர் வெங்கடேஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மருதமலை முருகன் கோயிலில் வெள்ளிவேல் திருடியவர் கைது!
மருதமலை முருகன் கோயிலில் வெள்ளிவேல் திருடியவர் கைதுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 10 Apr 2025 13:46 PM

கோவை ஏப்ரல் 10: கோவை மருதமலைக்கு (Coimbatore Marudhamalai) அருகே தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை (Silversmith) திருடிய வெங்கடேஷ் சர்மா என்பவர் அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் எழுபடை வீடாக சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில், 2025 ஏப்ரல் 4ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்த சூழலில், 2025 ஏப்ரல் 3ஆம் தேதி கோயிலின் அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள, 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் திருடப்பட்டது. சாமியார் வேடமணிந்து கோயிலுக்குள் நுழைந்த ஒருவர், மூலவருக்கு முன்பாக சுமார் 2.5 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலை திருடிச் சென்றது சிசிடிவி காட்சிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி வேல் திருடிய நபர் கைது

மருதமலை தியான மண்டபத்தில் இருந்து வெள்ளி வேல் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேல் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளிவேல் காணாமல் போனது

குடமுழக்கு விழாவுக்கு முந்தைய நாள் பலத்த காவல் பாதுகாப்பு இருந்த போதிலும், சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள, 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளிவேல் காணாமல் போனது. இந்த வேலை, சாமியார் வேடமணிந்த ஒருவர் திருடிச் சென்றதாக சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகி இருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திருடிய நபர் வெங்கடேஷ் சர்மா என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி வேல் திருட்டு நடந்தது என்ன?

“>

 

தனியாருக்குச் சொந்தமான வெள்ளிவேல்

மேலும், சம்பவம் நடைபெற்ற தியான மண்டபம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தனியாருக்குச் சொந்தமானது எனவும், இது மருதமலை முருகன் கோயிலுக்குள் நடைபெற்றதல்ல என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கோவை மண்டல இணை ஆணையர் விளக்கம்

கோவை மண்டல இணை ஆணையர் இதுகுறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: “திருட்டு நடந்த இடம் மருதமலை திருக்கோயிலில் அல்ல. மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேல் கோட்ட தியான மண்டபத்தில் தான் வெள்ளி வேல் திருடப்பட்டது. இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது அல்ல; இது ஒரு தனியாருக்கு சொந்தமான இடமாகும்” என்றார்.

இதில், திருட்டு சம்பவம் நிகழ்ந்த இடம் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அது கோயிலின் நிர்வாகத்தில் உள்ள பகுதியாக இல்லையென்றும், தனியாருக்குச் சொந்தமான இடமென்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...