Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?

TN SSLC Results 2025:தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே வெளியானதைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2025மே 19 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, முடிவு 2025 மே 14 இன்று அல்லது 2025 மே 15 நாளை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமாImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 May 2025 11:18 AM

தமிழ்நாடு மே 14: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 2025 மே 9-ற்கு பதிலாக 2025 மே 8-ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் முடிவும் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கனவே 2025 மே 19-ஆம் தேதி முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். முடிவை முன்கூட்டியே வெளியிட முடிவு எடுக்கப்பட்டிருந்தால், 2025 மே 14 இன்று அல்லது 2025 மே 15 நாளை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், பழைய தேதியே கணிப்பில் இருக்கும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?

பிளஸ்-2 மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் 2025 மே 9-ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த முடிவுகள் ஒரு நாள் முன்பே, அதாவது மே 8-ஆம் தேதி வெளியானது. இதன் தொடர்ச்சியாக, சுமார் 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. (10ம் வகுப்பு) தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகும் என்ற கூற்றுகள் கடந்த சில நாட்களாகவே கல்வித்துறை வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாவதாக அறிவிப்பு

முன்னதாக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டபோது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போது அந்த தேதிக்குக் கூடுதல் முன்னதாகவே முடிவுகள் வெளியாகும் சாத்தியக்கூறு நிலவுகிறது.

தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிடுவது குறித்த முடிவு

இந்தத் திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் 2025 மே 13 நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிடுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அதற்கான அறிவிப்பு இன்று (புதன்கிழமை) அல்லது நாளை (வியாழக்கிழமை) வெளியாகவும் சாத்தியமுள்ளது.

அப்படி இல்லையெனில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியான 2025 மே 19-ஆம் தேதிக்கே முடிவுகள் வெளியிடப்படும். மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கவனமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி. (10ஆம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் 2025 மார்ச் 28 முதல் 2025 ஏப்ரல் 15 வரை நடைபெறின. இந்தத் தேர்வுகள் காலை 10:15 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெறின. 2025 மார்ச் 28 அன்று பாகம் I மொழித் தேர்வும், 2025 ஏப்ரல் 2 அன்று ஆங்கிலத் தேர்வும், ஏப்ரல் 4 அன்று விருப்ப மொழி தேர்வும், 2025 ஏப்ரல் 7 அன்று கணிதத் தேர்வும், 2025 ஏப்ரல் 11 அன்று அறிவியல்த் தேர்வும், 2025 ஏப்ரல் 15 அன்று சமூக அறிவியல்த் தேர்வும் நடைபெற்றன.

இதற்கு முந்தைய நடைமுறைத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெற்றன. நடைமுறைத் தேர்வுகளுக்கு மொத்தம் 25 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, குறைந்தபட்சமாக 15 மதிப்பெண்கள் பெறுதல் அவசியமாகும். இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 2025 மே 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!...
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!...
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்...
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது......
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்...
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ...
"ஒன்றாக டின்னர் சாப்பிடுங்க" டிரம்ப் சொன்ன விஷயம்
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை......
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?...