இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்.. யார் இவர்?
Nellai Muthu Demise: இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். அவரது உடல் மதுரையில் இருக்கும் அவரது மகள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organisation) முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து இன்று காலமானார். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், திடீர் உடல் நல குறைவு காரணமாக உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நெல்லை முத்துவின் உடல் மதுரையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் துறைக்கு பல வழிகளில் முக்கிய பங்காற்றியவர் நெல்லை முத்து. திருநெல்வேலியில் பிறந்த சு.முத்து என்கிற நெல்லை முத்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கக்கூடிய சதீஷ் தவான் விண்வெளி (Sathish Dhawan Space Centre) ஆய்வு மையத்தில் முதல் நிலை விஞ்ஞானியாக பணியாற்றியவர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியதோடு அவரது நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்தார்.
உடல்நலக்குறைவால் நெல்லை முத்து காலமானார்:
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அவரது இல்லத்தில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் மதுரையில் இருக்கக்கூடிய அவரது மகள் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி சடங்குகள் மதுரையில் நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மகள் வீடு தபால் நகர் கலைநகரில் அமைந்துள்ளது.
நெல்லை முத்து மக்களுக்கு விண்வெளி சார்ந்த விஷயங்கள் எளிதாக புரிய பல புத்தகங்களையும், பல கட்டுரைகளையும் எழுதி உள்ளார். அதில் ஐன்ஸ்டீனும் அண்டைவெளியும் மற்றும் அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு என்ற இரண்டு புத்தகங்கள் தமிழக அரசின் சிறப்பு நூல் வ்ருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கிய விஞ்ஞானியாகவும் பல திட்டங்களில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் மீது இவர் கொண்ட ஆர்வம் அதன் நிலப்பரப்பு மற்றும் வளிமண்டலம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். 74 வயதாகும் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்