பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!

Palani Murugan Temple : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக 35 நாட்கள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.

பக்தர்களே கவனிங்க... பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!

பழனி முருகன் கோயில்

Updated On: 

19 Aug 2025 14:53 PM

 IST

திண்டுக்கல், ஆகஸ்ட் 19 : பழனி தண்டயுதபாணி கோயிலில் (Palani Murugan Temple) 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை (Palani Temple Cable Service) தொடங்கப்பட உள்ளது. 35 நாட்களுக்கு பிறகு நாளை காலை 9 மணி முதல் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபானி சுவாமி கோயில் உள்ளது. பழனி மலையில் உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், மின் இழுவை, ரோப் கார் சேவையை பயன்படுத்தி தரிசித்து வருகின்றனர்.

அதில், குறிப்பாக ரோப் கார் சேவையை பயன்படுத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். இதனால், அவ்வப்போது ரோப் காரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.

Also Read : திருத்தணியில் சோகம்.. தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் பலி

பழனி கோயிலில் ரோப் கார் சேவை ரத்து

31 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் மின் இழுவை மற்றும் படிப்பதையாக வழியாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் முடிந்து, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை முதல் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் பக்தர்கள், 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை காலை 9 மணி முதல் பக்தர்கள் ரோப் சேவையை பயன்படுத்தி தரிசனம் மேற்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் பழனி கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.94 கோடி செலுத்தி உள்ளனர்.

Also Read : கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு.. அமைச்சர் போட்ட உத்தரவு..

மேலும், தங்கம் 107 கிராமும், வெள்ளி 25,509 கிராமும் கிடைத்துள்ளது. அதோடு, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் கிடைத்துள்ளன. இவை தவிர பித்தளை வேல், வாட்ச், நவதானியங்களை உள்ளிட்டவையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..