மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிமுக தலைமை அறிவிப்பு!
AIADMK Announced District Secretaries Meeting | 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 2025 மே 29, 30 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 16 : 2025, மே மாத இறுதியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (District Secretaries Meeting) நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அலோசனை மேற்கொள்ளப்படும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது. இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026-ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு அரசு – கட்சிகள் தீவிரம்
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சுவார்த்தை, கட்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்த திமுக கூட்டணியில் எந்தவித மாற்றாமும் ஏற்படாத நிலையில், பிளவு பட்ட அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை விடவும் இந்த சட்டமன்ற தேர்தல் சற்று சவால் மிக்கதாக உள்ளது. காரணம் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vetri Kazhagam) களம் காண உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் விஜய் வருவார் என முடிவுகள் வெளியானது. இது அரசியல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/B2J9i52CP3
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 16, 2025
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 2025 மே மாத இறுதியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மே 29, 2025 மற்றும் மே 30, 2025 ஆகிய தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.