Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.. கடலின் மேற்பரப்பிற்கு வர என்ன காரணம்?

Doomsday Fish: மிகவும் அரிதாக காணப்படும் டூம்ஸ்டே மீன் என அழைக்கப்படும் ஓர் ஃபிஷ் தமிழக மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த மீனை சுமார் 7 பேர் தூக்கி வைத்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.. கடலின் மேற்பரப்பிற்கு வர என்ன காரணம்?
வலையில் சிக்கிய ஓர் ஃபிஷ்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Jun 2025 10:59 AM

“டூம்ஸ்டே மீன்” என்றும் அழைக்கப்படும் ஒரு ஓர் ஃபிஷ், சமீபத்தில் தமிழக கடற்கரையில் பிடிபட்டது. மேற்பரப்புக்கு அருகில் அரிதாகவே காணப்படும் இந்த ஆழ்கடல் உயிரினம், ஒரு பழைய ஜப்பானிய நம்பிக்கையின்படி, இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கையாக கருதப்படுகிறது. ஜப்பானியர்களின் பழைய நம்பிக்கையின்படி மேற்பரப்புக்கு அருகில் இந்த ஓர் ஃபிஷ் தோன்றுவது இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கையாக கருதப்படுவதால் இது டூம்ஸ்டே ஃபிஷ் என்று அழைக்கப்படுகிறது. சில நிகழ்வுகளில் பெரிய பூகம்பங்களுக்கு முன்பு குறிப்பாக ஜப்பானில் இந்த ஓர் ஃபிஷ் கரை ஒதுங்குவதை பார்த்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரியவகை ஓர் ஃபிஷ்:

இந்த பதிவில், வழக்கமாக ஆழ்கடலில் காணப்படும் ஓர் ஃபிஷ், டூம்ஸ் டே ஃபிஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் மீனவர் வளையல் சிக்கியுள்ளது என்ற தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்த தசைகளைக் கொண்ட பெரிய முள் உடைய மீன் ஆகும். இந்த மீன் மெதுவாக நகரக் கூடியது. இது பொதுவாக தண்ணீரில் மெதுவாக மிதக்கும். செங்குத்து நிலையில் மிதக்கும் இந்த மீன் பிளான்டனை உணவாக எடுத்துக் கொள்ளும்.

இணையத்தில் கவனம் பெரும் ஓர் ஃபிஷ்:


எனவே இயற்கையாகவே, இந்திய கடற்கரையில் இது காணப்பட்டது உள்ளூர் மக்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஓர் ஃபிஷ் எனப்படும் அரிய வகை கடல் உயிரனமானது வெள்ளி நிற உடலுடன் தலைக்கு அருகில் சிவப்பு முகடு இருக்கும் மீனை மொத்தம் ஏழு பேர் பிடித்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த மீன் நீருக்கடியில் ஏற்படும் நில அதிர்வை உணர்ந்து மேற்பரப்புக்கு வந்து மனிதர்களை எச்சரிக்க முடியும் என கருதப்படுகிறதுஆனால் இது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் வாழும் மீன்:

ஓர் ஃபிஷ் சுமார் 11 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. அவை பொதுவாக 200 முதல் 1200 அடி ஆழம் அதாவது ஆழ்கடல் நீரில் வாழக்கூடியது. ஓர் ஃபிஷ், நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது அல்லது இறக்க நேரிடும் போது அல்லது இனப்பெருக்கத்தின் போது மட்டுமே மேற்பரப்புக்கு வரக்கூடியது என்பதால் தான் இந்த மீனை பார்ப்பது அரிதான ஒன்று என கருதுகின்றனர்.

இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் உலக அளவில் சில இடங்களில் மட்டுமே இது மேற்பரப்புகளில் காணப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டாஸ்மீனியாவில் உள்ள ஸ்ட்ராஹான் அருகே உள்ள பெருங்கடல் கடற்கரையில் ஒரு ஓர் ஃபிஷ் கரை ஒதுங்கியது. மூன்று மீட்டர் நீளமுள்ள இந்த மீன் ராபர்ட்சன் என்ற குடியிருப்பாளராக கண்டுபிடிக்கப்பட்டது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் ஆழமற்ற நீரில் இந்த அரிய ஆழ்கடல் உயிரினம் மீண்டும் காணப்பட்டது.