Arshdeep Singh: பிரபல பஞ்சாபி நடிகையுடன் காதலா..? அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
Punjabi Actress Samreen Kaur: அர்ஷ்தீப் சிங் தனது ஸ்னாப்சாட்டில் பகிர்ந்த புகைப்படத்தில், அவர் ஒரு பெண்ணின் கையைப் பிடித்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் அப்பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியாததால், சஸ்பென்ஸ் மேலும் அதிகரித்தது. தற்போது நெட்டிசன்கள், அர்ஷ்தீப் யாருடைய கையைப் பிடித்திருக்கிறார் என்ற அந்த பிரபல பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கவுர்
ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு நடுவே, நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளார். நாம் பேசும் அந்த வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) ஆவார். இதற்குக் காரணம் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படம். சமீபத்தில், அர்ஷ்தீப் தனது ஸ்னாப்சாட்டில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. இதன்மூலம், அர்ஷ்தீப் சிங் பிரபல பஞ்சாபி நடிகையை காதலித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: முதல் வெற்றிக்காக போராட்டம்.. புள்ளிக்காக காத்திருக்கும் 3 முன்னாள் சாம்பியன்கள்..!
அர்ஷ்தீப் சிங் பதிவிட்ட போஸ்ட் என்ன..?
🚨 RUMOURS ALERT 🚨
Arshdeep Singh posted two stories on Snapchat where he’s seen holding a girl’s hand.
Fans noticed the “੧” tattoo, which matches Samreen Kaur, who is also the ex of Ashish Chanchlani.
Is Arshdeep dating Samreen Kaur? 👀 pic.twitter.com/dEGw3Gkq1t
— Mention Cricket (@MentionCricket) April 5, 2026
அர்ஷ்தீப் சிங் தனது ஸ்னாப்சாட்டில் பகிர்ந்த புகைப்படத்தில், அவர் ஒரு பெண்ணின் கையைப் பிடித்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் அப்பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியாததால், சஸ்பென்ஸ் மேலும் அதிகரித்தது. தற்போது நெட்டிசன்கள், அர்ஷ்தீப் யாருடைய கையைப் பிடித்திருக்கிறார் என்ற அந்த பிரபல பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிறகு அவர்கள் புகைப்படத்தில் உள்ள மிகச்சிறிய குறிப்புகளை கவனிக்கத் தொடங்கினர். அப்போது, அர்ஷ்தீப் கவனிக்காத ஒன்றை, இணையவாசிகள் துல்லியமாகக் கவனித்து, அந்த பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை கண்டறிந்தது.
ஊடக அறிக்கைகளின்படி, அர்ஷ்தீப்பின் புகைப்படத்தில் காணப்படும் இளம் பெண்ணின் கையில் உள்ள டாட்டூ, சம்ரீன் கவுருடன் துல்லியமாகப் பொருந்துகிறது. சமூக வலைதளங்களில், அர்ஷ்தீப்பிற்கும் சம்ரீனுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து அர்ஷ்தீப் சிங் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, சம்ரீன் கவுரும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. தற்போதைக்கு, இவை வெறும் வதந்திகளே. இருப்பினும், இந்த வதந்திகளும் தொடர்ந்து பரவி வருகின்றன.
ALSO READ: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!
அர்ஷ்தீப்பின் காதலி யார்?
அர்ஷ்தீப் சிங்கின் கையைப் பிடித்திருப்பவர் வேறு யாருமல்ல, அவருடைய காதலியான பஞ்சாபி மாடல் சம்ரீன் கவுர்தான். ஜம்மு காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்ட சம்ரீன், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர். சம்ரீன் கவுர் பஞ்சாபி மற்றும் இந்தி இசைத் துறைகளிலும் பணியாற்றியுள்ளார். ஜுபின் நௌடியாலின் ‘துஜே பூல்னா தோ சாஹா’ மற்றும் பாட்ஷாவின் ‘பாவ்லா’ போன்ற பிரபலமான பாடல்களில் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.