Ind vs Zim: இந்தியாவுக்கு வாழ்வா – சாவா போராட்டம்.. ஜிம்பாப்வேயை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துமா?
India vs Zimbabwe T20 World Cup: உதாரணமாக, இந்தியா முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் எடுத்தால், ஜிம்பாப்வேயை 120 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுத்து, இந்தியாவால் மீண்டும் போட்டியில் தலைதூக்க முடியும்.

இந்திய அணி
நடப்பு 2026 டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்திருந்தாலும், இந்திய அணி தற்போது வழக்கத்திற்கு மாறான இக்கட்டான சூழலில் உள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான உற்சாகமான வெற்றி உட்பட தோல்வியே அடையாமல் வலம் வந்த இந்திய அணி, ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. இந்த பின்னடைவு, குரூப் 1 பிரிவில் இந்தியாவை -3.800 என்ற மோசமான நிகர ரன் ரேட் (NRR) உடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. முதலிடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் (+5.350) மற்றும் தென்னாப்பிரிக்கா (+3.800) ஆகிய அணிகளை விட இந்தியா வெகுவாகப் பின்தங்கியுள்ளது. இதனை சமன் செய்ய, வெற்றி பெறுவது மட்டும் போதாது, இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் இமாலய வெற்றி.. இந்தியாவுக்கு உருவான புதிய சவால்..
100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்:
அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், பிப்.26 அன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்திவிட்டு, அதன்பின் வலுவான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள வேண்டும். ஜிம்பாப்வேக்கு எதிராக 100 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இது என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல, ரன் ரேட் இடைவெளியைக் குறைக்க அது ஒரு கட்டாயத் தேவையாகும்.
100 ரன் வித்தியாச வெற்றி ஏன் அவசியம்?
அகமதாபாத்தில் சந்தித்த படுதோல்வி, இந்திய அணிக்கு இருந்த சாதாரண வெற்றி வாய்ப்புகளைப் பறித்துவிட்டது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய மூன்று அணிகளும் தலா நான்கு புள்ளிகளுடன் முடித்தால் (இந்தியா அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று, தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியில் தோற்றால் இது சாத்தியம்), ரன் ரேட் அடிப்படையிலேயே அரையிறுதிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்படும். தற்போது இந்தியா இதில் மிகவும் பின்தங்கியுள்ளது. உதாரணமாக, இந்தியா முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் எடுத்தால், ஜிம்பாப்வேயை 120 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுத்து, இந்தியாவால் மீண்டும் போட்டியில் தலைதூக்க முடியும்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் தேவைப்படலாம். இந்தத் தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ள அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் காரணமாக, சஞ்சு சாம்சனை தொடக்க வீரராகக் களமிறக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி, முதல் 6 ஓவர்களில் 70க்கும் அதிகமான ரன்களைக் குவிப்பது மிக முக்கியம்.
இதையும் படிக்க: இந்திய அணியின் அதிர்ச்சித் தோல்வியும்.. சர்ச்சையான அணித் தேர்வும்.. விமர்சனத்திற்கு ஆளான கம்பீர், சூர்யகுமார்!!
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியாவின் பந்துவீச்சு வியூகத்திலும் மாற்றம் தேவைப்படலாம். குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் மீண்டும் அணிக்குத் திரும்பும் அக்சர் படேல் ஆகிய மூவர் அடங்கிய சுழற்பந்து வீச்சுத் தாக்குதல், ஜிம்பாப்வேயை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவின் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.