IPL 2026: கைகளில் கருப்பு பட்டை.. RCB vs SRH போட்டியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..! | TV9 Tamil News

IPL 2026: கைகளில் கருப்பு பட்டை.. RCB vs SRH போட்டியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Published: 

28 Mar 2026 21:06 PM

 IST

RCB vs SRH: ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று அதாவது 2026 மார்ச் 28ம் தேதி எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் வீரர்கள் கருப்புக் கைப்பட்டைகளை அணிந்து விளையாடி வருகின்றனர். அதன்படி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் ஏன் கருப்புக் கைப்பட்டைகளை அணிகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

1 / 5கடந்த 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற பிறகு நடந்த வெற்றி அணிவகுப்பின் போது, பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ​​மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற பிறகு நடந்த வெற்றி அணிவகுப்பின் போது, பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ​​மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 / 5

உயிரிழந்த தங்களது 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆர்சிபி அணி வீரர்கள் தங்கள் கைகளில் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடி வருகின்றனர். அதேநேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களும் தங்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து மரியாதை செலுத்தினர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

3 / 5

இதுகுறித்து ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “மரியாதையின் அடையாளமாக, வீரர்கள் வார்ம்-அப் பயிற்சிகளின் போது 11 ஆம் எண் பொறிக்கப்பட்ட பயிற்சி ஜெர்சிகளையும், போட்டியின் போது கருப்பு நிறக் கைப்பட்டைகளையும் அணிவார்கள்” என தெரிவித்திருந்தது.

4 / 5

ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாக வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அணி நிர்வாகம் அவர்களைப் பல்வேறு வழிகளில் கௌரவித்து வருகிறது.

5 / 5

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி ஐந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் மீதமுள்ள இரண்டு உள்ளூர் போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெறுகிறது.

Follow Us