PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை” இஸ்ரோ தலைவர் தகவல்..
இதுகுறித்து மேலும் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், PSLV என்பது ஒரு 4 கட்ட வாகன் ஆகும். இதில், இன்று விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்டின் 3வது நிலை எதிர்பார்த்தபடி, பயணித்ததாகவும், 3வது நிலையில் பயணப் பாதையில் இருந்து வாகனம் விலகி காணப்படுவதாகவும் தெரிவித்தார்

PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது
ஆந்திரா, ஜனவரி 12: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. தொடர்ந்து, தோல்விக்கான தரவுகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களை PSLV-C62 ராக்கெட் சுமந்து சென்றது. 3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ x தள பதிவு:
The PSLV-C62 mission encountered an anomaly during end of the PS3 stage. A detailed analysis has been initiated.
— ISRO (@isro) January 12, 2026
3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டதாகவும், இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டும் இதேபோல், 3வது நிலையில் தோல்வியை சந்தித்தது. அதேபோல், தற்போது அதே 3வது நிலையில் மீண்டும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
#WATCH | Sriharikota, Andhra Pradesh |on PSLV-C62 mission, ISRO Chief V Narayanan says,”Today, we have attempted the PSLV C62 / EOS – N1 Mission…There is a deviation observed in the vehicle flight path. The mission could not proceed in the expected path. We are going through… https://t.co/Ai3JdxKrMN pic.twitter.com/zUxKoRGnt6
— ANI (@ANI) January 12, 2026
இதுகுறித்து மேலும் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், PSLV என்பது ஒரு 4 கட்ட வாகன் ஆகும். இதில், இன்று விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்டின் 3வது நிலை எதிர்பார்த்தபடி, பயணித்ததாகவும், 3வது நிலையில் பயணப் பாதையில் இருந்து வாகனம் விலகி காணப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால், திட்டமிடப்பட்ட பாதையில் பயணத்தைத் தொடர முடியவில்லை. நாங்கள் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்தும் வரும் தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
PSLV C- 61 ராக்கெட் தோல்வி:
முன்னதாக, கடந்த 2025 மே மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV C- 61 ராக்கெட் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட்டிலும் 1,696.24 கிலோ எடை கொண்ட இஒஎஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. அது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாக இருக்கும் என எதிர்பார்கப்பட்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.