5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சற்றுப்பயணம்.. திட்டம் என்ன? முழு விவரம்!
PM Modi 5 Nation Tour : பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக 5 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா, கானா, டிரினிடாட், டொபாகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முக்கியமாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார்.

டெல்லி, ஜூன் 28 : அரசு முறைப்பயணம் பிரதமர் மோடி (PM Modi) 2025 ஜூலை மாதம் முதல் வாரத்தில் 5 நாடுகளுக்கு பயணம் (PM Modi 5 Nation Tour) மேற்கொள்கிறார். 2025 ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். கானா, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மேடி 2025 ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறார். அதன்படி, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கானாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் மோடியின் முதல் கானா பயணமாகும். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, கானா அதிபரை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
மேலும், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்துடனான இந்தியாவின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
அதைத் தொடர்ந்து, ஜூலை 3,4ஆம் தேதிகளில் டிரினிடாட் மற்றும் டொபாகோவ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த நாடுகளுக்க இந்திய பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.




இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, டிரினிடாட் மற்றும் டொபாகோ அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிஸ்ஸேசர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், அவர் தீவு நாட்டின் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கான பிரதமர் மோடியின் பயணம், இருதரப்பு உதவுகளை மேம்படுத்த உதவும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனது பயணத்தின் மூன்றாவது கட்டமாக பிரதமர் மோடி 2025 ஜூலை 4,5ஆம் தேதிகளில் அர்ஜென்டினா செல்கிறார்.
திட்டம் என்ன?
பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா-அர்ஜென்டினா கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி, அதிபர் ஜேவியர் மிலேவே சந்திப்பு விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, 2025 ஜூலை 5 முதல் 8ஆம் தேதி வரை பிரேசில் பயணம் மேற்கொள்கிறார். பிரேசில் குடியரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வரிவின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி பிரேசில் செல்கிறார். அங்கு 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இந்த உச்சி மாநாட்டில், காலநிலை, செயற்கை நுண்ணறிவு, பொருளாதார பிரச்னைக்ள உள்ளிட்ட முக்கிய உலகளாவிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து, பல நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், 2025 ஜூலை 9ஆம் தேதி நமீபியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இது இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கு ஒரு பிரதமர் மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகும். தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி, அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் மேலும், நமீபியா நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப்பயணம் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.