நாளை காலை வெளியாகிறது அட்லீ – அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்
AA22xA6 Movie Update: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லியின் கூட்டணி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்ததில் இருந்தே படத்தின் மீதானா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நாளை படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளது.

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun). 2003-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய இவர் பலப் படங்களில் நடித்து தற்போது 2025-ம் ஆண்டு தனக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் ரசிகர்கள் இல்லை தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லி (Director Atlee Kumar) உடன் புதிய படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
பல நூறு கோடிகளை கொண்டு உருவாக உள்ள இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாள் ஆன ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படம் குறித்த தக்கது. மேலும் இந்தப் படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சனை அடிப்படியாக கொண்டு உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.




நாளை காலை வெளியாகும் புதிய அப்டே:
தொடர்ந்து படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படம் குறித்த வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
When Elegance meets Magic! ✨
Revealing Tomorrow 11 AM❤️🔥#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/AlG9DwRQSR— Sun Pictures (@sunpictures) June 6, 2025
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று முன்னதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் நாளை படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக 6 பேர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.