Chinmayi Sripada : டி.இமானின் இசையில் பாடும் சின்மயி.. வெளியான பதிவு வைரல்!
Chinmayi Sripada And Music Director D Iman : தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், பான் இந்தியப் படங்களில் பல பாடல்களைப் பாட மிகவும் பிரபலமானவர் பாடகி சின்மயி. இவர் சமீபகாலமாகத் தமிழில் எந்த பாடல்களும் பாடாத நிலையில், இசையமைப்பாளர் டி இமானின் இசையமைப்பில் புதிய பாடலை பாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த பதிவை இசையமைப்பார் டி இமான் வெளியிட்டுள்ளார்.

பாடகி சின்மயியின் (Chinmayi) குரலில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் போன்ற மொழிகளில் பல பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இவர் இவர் பான் இந்திய பாடகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவரின் குரலில் தக் லைஃப் (Thug Life)படத்திலிருந்து ‘முத்தமழை’ (Muththa Mazhai) என்ற பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது வந்தது. உண்மையில் தக் லைஃப் படத்தில் தமிழ் வெர்சனில் இப்பாடலைப் பாடகி தீ (Dhee) பாடியிருந்தார். தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் (Thug Life Audio launch) அவர் கலந்துகொள்ளாத நிலையில், பாடகி சின்மயி இந்த முத்தமழை பாடலை தமிழில் பாடியிருந்தார். இந்த பாடலானது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. மேலும் தக் லைஃப் படத்தில் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பாடகி சின்மயிதான் இந்த முத்தமழை பாடலை பாடியிருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழிலும் இசை வெளியீட்டு விழாவின் போது பாடி அசத்தியிருந்தார். பாடகி சின்மயி கடந்த 2018ம் ஆண்டு தமிழ் சினிமாவில் எந்த படங்களிலும் பாடல்களைப் பாடவில்லை. அவருக்குத் தமிழ் சினிமாவில் பாடல்கள் மற்றும் படங்களில் டப்பிங் பேசுவதற்கும் தடை செய்யப்பட்டிருந்தது.




இந்நிலையில் இவரின் குரலில் முத்தமழை பாடல் பிரபலமான நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் பாடத் தொடங்கியுள்ளார். இசையமைப்பாளர் டி இமானின் இசையமைப்பில் அவர் புதிய பாடலை பாடியிருக்கிறார். இது தொடர்பாக இசையமைப்பாளர் டி இமான் (D Iman), தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் டி இமான் வெளியிட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
அந்த பதிவில் இசையமைப்பாளர் டி இமான், “ஆன்மாவைத் தொடும் சின்மயியின் பாடலுடன் மீண்டும் ஒரு மேஜிக்கை உருவாக்குகிறேன். அது எனது மனதிற்கு நெருக்கமான மெலோடி பாடல்” என்று அந்த பதிவில் இசையமைப்பாளர் டி இமான் எழுதியுள்ளார்.
சின்மயி குரல் தடை செய்யக் காரணம் :
பாடகி சின்மயி மீது கடந்த 2018ம் ஆண்டு பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது புகார் தெரிவித்திருந்தார். இந்த விஷமானது கோலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த புகாரை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்துவின் மீதும் மேலும் பல சர்ச்சைகள் எழ தொடங்கியது. இதன் காரணமாக அவருக்கும் வாய்ப்புகள் குறைத்து. இந்த பிரச்சனையைத் தொடர்ந்து டப்பிங் யூனியனில் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்துதான் அவருக்குப் படங்களில் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாடகி சின்மயி தமிழில் எந்த படங்களிலும் பாடல்களைப் பாடவில்லை. தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் பாடத் தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை பாடலை பாடி மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.