Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

12 தொகுதிகளை கேட்கும் மதிமுக? தேர்தல் நேரத்தில் முடிவாகும் என வைகோ விளக்கம்..

Vaiko: திமுக கூட்டணியில் மதிமுக 12 இடங்கள் கேட்கும் என துரை வைகோ தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் நேரத்தில் எத்தனை இடங்கள் என்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.

12 தொகுதிகளை கேட்கும் மதிமுக? தேர்தல் நேரத்தில் முடிவாகும் என வைகோ விளக்கம்..
வைகோ
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2025 10:31 AM

சென்னை, ஜூன் 30, 2025: திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஜூன் 29 20265 அன்று நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில் வெளியான காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக உடனான கூட்டணி தொடரும்:

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆளக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் தரப்பில் தீவிரமாக செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி உடைய கூடும் எனவும் திமுக கூட்டணியில் இருக்க கட்சிகள் வெளியேறக் கூடும் என பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகிய வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் இல்லை திமுக கூட்டணியில் தான் தொடர போவதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ ஜூன் 29 2025ஆம் தேதி அன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசும் பொழுது ” எதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக திராவிட இயக்கங்களை பாதுகாப்பதற்காகத்தான் அந்த நிலைப்பாட்டில் தான் தற்போது மதிமுக இருப்பதாகவும் கூட்டணியிலிருந்து வெளியேற எந்த அவசியமும் இல்லை எனவும் திமுகவுடன் தான் கூட்டணி” எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

எத்தனை இடங்கள் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்:

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தரப்பில் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், “ திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு எத்தனை இடங்கள் என்பது தேர்தல் நேரத்தில் திமுக முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். ஆதிக்கம் நிறைந்த கட்சியாக இடம்பெற வேண்டுமென்றால் குறைந்தது 8 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றெடுக்க வேண்டும் அதனை கருத்தில் கொண்டு 12 தொகுதிகள் என முதன்மை செயலாளர் துறை வைகோ கூறியிருக்கலாம் ஆனால் அது உறுதியான ஒன்று அல்ல தேர்தல் நேரத்தில் இரட்டை இலக்குகள் தான் கேட்கப்படும் என்பது தவறான செய்தி” என தெளிவுபடுத்தியுள்ளார்