எடப்பாடி பழனிசாமியுடன் புகைப்படம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த ஆர்டர்..
Edappadi K Palanisamy: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் 2025, ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தன்னுடன் புகைப்படம் எடுப்பவர்கள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 29, 2025: தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். 2025 ஜூலை 7ஆம் தேதி இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். ஜூலை 7 2025ஆம் தேதி மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தை 2025, ஜூலை 21ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நிறைவு செய்கிறார். சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முக்கிய அறிவிப்பு சொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது எடப்பாடி பழனிசாமி உடன் புகைப்படம் எடுப்பவர்கள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி:
2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களை இருக்கக்கூடிய நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக அரசை எப்படியாவது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என ஆயத்தமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2025 ஜூலை 7ஆம் தேதி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது தன்னுடன் புகைப்படம் எடுப்பவர்கள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றப் பின்னணி இருப்பவர்கள் அல்லது குற்ற சம்பவம் தொடர்பான வழக்கு அவர்கள் மீது இருந்தால் எடப்பாடி பழனிசாமி உடன் புகைப்படம் எடுக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களிலேயே வரக்கூடிய நிலையில் இது போன்ற புகைப்படங்கள் எடுத்தால் திராவிட முன்னேற்ற கழகம் தரப்பில் தேர்தல் சமயத்தில் இந்த புகைப்படம் வைத்து அழுத்தம் கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட செயலாளர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம்:
🛑 நாளும் இந்திமொழித் திணிப்பு 🙅🏾♂
🛑 கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு 🙅🏾♂
🛑 தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு 🙅🏾♂
🛑 #NEET எனும் பலிபீடம் கொண்டு மாணவர்கள் உயிர் பறிப்பு 🙅🏾♂
🛑 #Delimitation மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வலிமை குறைப்பு 🙅🏾♂… pic.twitter.com/kB4o9HLRiP
— M.K.Stalin (@mkstalin) June 28, 2025
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2025 ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் இரண்டு பேரும் சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது