Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஏப்ரல் 1, 2026 தொடங்கும் என அறிவிப்பு..

Census: 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஏப்ரல் 1, 2026 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் உட்பட 34 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஏப்ரல் 1, 2026 தொடங்கும் என அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jun 2025 22:13 PM

மக்கள் தொகை கணக்கெடுப்பு: இந்திய அரசு வீட்டு வசதி பட்டியல் செயல்பாட்டை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நடைபெறும். 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமாக சாதி வாரி கணக்கெடுப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணியில் 34 லட்சம் பேர்:

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் நியமித்தல், பொறுப்புகளை பகிர்ந்து அளித்தல் ஆகியவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த பெரிய பணிக்காக கணக்கெடுப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒன்று புள்ளி மூன்று லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் உட்பட 34 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு கட்டங்களாக நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு:


இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு வசதி பட்டியல் செயல்பாடு எனப்படும் முதல் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டின் வீட்டு நிலைமைகள், சொத்துகள் மற்றும் வசதிகள் சேர்க்கப்படும். அதைத்தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு எனப்படும் இரண்டாவது கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபரின் விவரங்களுடன் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

டிஜிட்டல் முறையில் கணெக்கெடுப்பு:

முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் வடிவத்தை ஒட்டி இருக்கும் அதாவது மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்தி தரவை சேகரித்து பதிவேற்றம் செய்யப்படும். அதேபோல் இந்த டிஜிட்டல் முறையில் குடிமக்கள் தங்களது விவரங்களை சுய கணக்கீடு என்ற ஒரு ஆப்ஷன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனிமனித விவரங்கள் குறிப்பாக திருமணமான நிலை, வயது, வேலை, பெயர் சாதி, உள்ளிட்ட விவரங்களை தங்களால் சுயமாக பதிவேற்றம்