2026 தேர்தல் வியூகம்… ஜூலை 7 முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palanisamy State Wide Tour : மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 2025 ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை முதற்கட்ட பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

2026 தேர்தல் வியூகம்... ஜூலை 7 முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

27 Jun 2025 19:10 PM

சென்னை, ஜூன் 27 : மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை (Edappadi Palanisamy) தொடங்குகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 2025 ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை முதற்கட்ட பயணத்தை (Edappadi Palanisamy Tour) எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். கோவை மாவட்டத்தில் தொடங்கும் பயணத்தை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நிறைவு செய்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (2026 Tamil Nadu Assembly Polls) இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் எடப்பா பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, 2025 ஜூலை 7,8ஆம் தேதிகளில் கோவையிலும், 2025 ஜூலை 10, 11ஆம் தேதி விழுப்புரம், திண்டிவனம், 2025 ஜூலை 12,14ஆம் தேதிகளில் கடலூரிலும், 2025 ஜூலை 15ஆம் தேதி மயிலாடுதுறையிலும், 2025 ஜூலை 16,17ஆம் தேதிகளில் திருவாரூர், நாகப்பட்டினத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 18,19,20,21ஆம் தேதிகளில் தஞ்சாவூரில் தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார். கடைசியாக தஞ்சாவூர் தெற்கு தொகுதியில் பேராவூரணி தொகுதியில் தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது முதல் வாக்குறுதியை அவர் அறிவித்தார். இதுகுறித்து  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ”திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி” என அவர் அறிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே எஞ்சி இருக்கும் நிலையில்,  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, திமுகவை வீழ்த்த வேண்டும் என முனைப்பில் அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. அதிமுக பொறுத்தவரை பாஜக உடனான கூட்டணி உறுதி செய்துவிட்டது. அடுத்ததாக அந்த அணியில் கூடுதல் கட்சிகளை இணைக்க ஆர்வம் காட்டி வருகிறது.

அதோடு, கட்சியை பலப்படுத்த அதிமுக தலைமை பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக  மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில், அடுத்த கட்டமாக  சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் திமுகவின் குறைகளை மக்களிடம் எடுத்து சொல்வார். ஏற்கனவே, திமுகவின் குறைகளை  மக்களிடம் எடுத்த செல்ல மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.